விருதுநகர் மாவட்ட முழுவதுமுள்ள அர்ச்சகர்கள், பூசாரிகள், கிராமகோவில் பூசாரிகள், திருக்கோவில் பணியாளர்கள்517 பேர்களுக்கு20 கிலோ அரிசியை பால்வளத்துறையமைச்சர் இராஜேந்திரபாலாஜி வழங்கினார்? முழுவிபரம்-விண்மீன்நியூஸ்
மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி, மாண்புமிகு தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களின் ஆலோசனைக்கு இணங்க விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் வத்திராயிருப்பு சிவகாசி சாத்தூர் விருதுநகர் அருப்புக்கோட்டை காரியாபட்டி இருக்கன்குடி உட்பட மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை திருக்கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகள், ஒரு கால பூஜை மற்றும் கிராம கோயில் பூசாரிகள் திருக்கோவில்களில் பணியாற்றும் பணியாளர்கள் என மொத்தம் 517 நபர்களுக்கு தலா 20 கிலோ அரிசியை மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அவர்கள் வழங்கினார் அவர்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருமதி சந்திரபிரபா முத்தையாஅவர்கள் மற்றும் நகரக் கழகச் செயலாளர் இன்பத்தமிழன் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன் வத்திராயிருப்பு யூனியன் சேர்மன் சிந்து முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்