கோயில் அர்ச்சகர்களுக்கு பள்ளிவாசல் இமாம்கள் நலத்திட்ட உதவி? தஞ்சையில் நெகிழ்ச்சியடைந்த மக்கள்?முழுவிபரம் – விண்மீன் நியூஸ்
கோயில் அர்ச்சகருக்கு உதவி வழங்கிய பள்ளிவாசல் இமாம் நெகிழ்ச்சி ஏற்படுத்திய தஞ்சை சம்பவம்..
பல அவதூறுகளை முஸ்லிம்கள் மீது அள்ளி வீசினாலும் மனிதநேயத்தை தொடர்ந்து தமிழக மண்ணில் விதைத்து கொண்டே இருக்கும் இஸ்லாமியர்கள்..
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒன்றாகத் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள் அடைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூரில் உள்ள கோயில்களும் அடைக்கப்பட்டுள்ளதால் கோயில் அர்ச்சகர்கள் வருமானம் ஏதுமின்றி உள்ளதால் இஸ்லாமிய அமைப்பு சார்பில் சிறிய கோயில் அர்ச்சகர்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் அய்யங்கடைத் தெரு பள்ளிவாசல் இமாம் முகமது ருஸ்தும் அலி ஏற்பாட்டின்படி ரசா ஏ முஸ்தபா அறக்கட்டளை சார்பில், தஞ்சாவூர் வடக்கு வீதி விநாயகர் கோயிலில் அப்பகுதியில் உள்ள 15 இந்துக் கோயில் அர்ச்சகர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.800 மதிப்பிலான அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது இந்தியா முழுவதும் கொரானா குறித்து இந்துத்துவா சக்திகள் முஸ்லிம்கள் மீது அவதூறு கிளம்பினாலும் பொதுவான இந்துக்கள் மத்தியிலும் முஸ்லிம்கள் இடையே உள்ள இணக்கத்தை உறுதி படுத்தும் நிகழ்வு என பத்திரிக்கைகள் பாராட்டு தெரிவித்து உள்ளது..