இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

திமுகவை தொடர்ந்து போராட்டத்தில் குதித்த மாணவர்கள்?களமிறங்கிய சென்னை நியூகாலேஜ் ?போலீஸ் குவிப்பு?

advertisement by google

திமுகவை தொடர்ந்து போராட்டத்தில் குதித்த மாணவர்கள்.. களமிறங்கிய சென்னை நியூ காலேஜ்.. போலீஸ் குவிப்பு!

advertisement by google

சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் செய்ய தொடங்கி உள்ளனர். முதல்முறையாக சென்னை நியூ காலேஜ் மாணவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

advertisement by google

பெரும் எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முதல்நாள் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பின் நேற்று இந்த மசோதா சட்டமானது. இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

advertisement by google

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுக்க திமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் சட்ட நகலை எதிர்த்து திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போராட்டம் செய்தார். முக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பாக இந்த போராட்டம் நடதப்பட்டது.

advertisement by google

சென்னையில் திமுக நடத்திய போராட்டம் பெரிய வைரலாகி உள்ளது. திமுகவினர் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

advertisement by google

உதயநிதியை கைது செய்ய சென்ற போலீஸ்.. தடுத்து வாக்கு வாதம் செய்த தொண்டர்கள்.. சென்னையில் பரபரப்பு!
இந்த நிலையில் திமுக போராட்டத்தை தொடர்ந்து சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் செய்ய தொடங்கி உள்ளனர். முதல்முறையாக சென்னை நியூ காலேஜ் மாணவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். 1000க்கும் அதிகமான கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கும் தமிழக அதிமுக அரசுக்கும் எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்பி வருகிறார்கள். இதனால் தற்போது அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளார். கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்ட பின்பும் கூட அங்கு போலீசார் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button