சென்னையிலுள்ள ?வள்ளுவர் கோட்டம்? முக்கிய தகவல்கள் – விண்மீன்நியூஸ்
ஏப்ரல்_15.
வள்ளுவர் கோட்டம்
1976 சென்னை மாநகரின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது. 18.9.1974 அன்று தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
வள்ளுவர் கோட்ட உருவாக்கப் பணிகள் 1976 ஜனவரித் திங்களில் முடிக்கப்பட்டன.
15.4.1976-ஆம் ஆண்டு ஆளுநர்
திரு. கே.கே. ஷா அவர்கள் தலைமையில், இந்தியக் குடியரசுத் தலைவர் திரு.பக்ருதீன் அலி அகம்மது அவர்களால் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது. இங்கு அமைக்கப்பட்டிருக்கிற பிரம்மாண்டமான தேர், திருவாரூர் கோயில் தேரை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
தேரின் பீடம் 25 அடி. சதுரப் பளிங்கால் ஆனது. ஏழு அடி உயரமுள்ள இரு யானைகள் தேரை இழுப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. பெரியதும், சிறியதுமாக உள்ள நான்கு சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒரே கல்லால் ஆனவை. தூண்கள் ஏதுமில்லாத அரங்கத்தின் நீளம் 220 அடி; அகலம், 100 அடி. ஆசியாவின் மிகப்பெரிய அரங்குகளில் இதுவும் ஒன்று. 4,000 பேர் வரை அமரலாம்.