தவறான தகவலை நம்ப வேண்டாம்? பயணிகள் ரயில்கள் அனைத்தும்மே3வரை ரத்து?ரயில்வே அமைச்சகம் தகவல் ,முழு விபரம் – விண்மீன்நியூஸ்
✍?⚡பயணிகள் ரயில்கள் அனைத்தும் மே-3 வரை ரத்துசெய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு எந்த சிறப்பு ரயிலும் இயக்கப்படாது. இதுகுறித்து வரும் எந்த தவறான தகவலையும் நம்பவேண்டாம் என ரயில்வே அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
நேற்று மும்பையின் பந்த்ரா பகுதியில் நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் இறங்கினர்.
அவர்கள் எல்லாம் பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் எனத் தெரியவந்துள்ளது.
எங்களுக்கு வேலையும் இல்லை உணவும் இல்லை. உடனடியாக ரயிலை இயக்குங்கள் எங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புங்கள் எனக் கூறி போராட்டத்தில் இறங்கினர்.
முகக்கவசங்கள், சமூக இடைவெளி எதையும் பின்பற்றாமல் மக்கள் சாலைகளில் கூடி போராட்டம் நடத்தியது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது
இதைக்குறித்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் பேசுகையில், “ மும்பையில் ஏராளமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் இங்கிருந்து சொந்த ஊர்களுக்கு நோயுடன் செல்லப்போகிறார்களா? பந்த்ரா ரயில்நிலையத்தில் ஒன்று கூடிவிட்டால் பிரதமர் மோடி மாநில எல்லைகளை திறக்க உத்தரவிடுவார் என தொழிலாளர்கள் நினைத்திருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.