மேடை, கேமரா, மன்றம், அரசியல் என்ற லாபக்கணக்கு இல்லாமல் 1.25 கோடி கொரனா தடுப்பு நிவாரண உதவி வழங்கிய நடிகர் அஜித்குமார் – விண்மீன்நியூஸ்
நடிகர்களின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு கணக்கு இருக்கும், அதில் சுயநலமின்றி எதிர்பார்ப்பு இன்றி அள்ளி கொடுப்பவர் வெகுசிலரே சிவகார்த்திகேயன் அதில் குறிப்பிடதக்கவர்
சில நடிகர்கள் பின்னணியில் பிரிவினைவாத சக்திகள் இருந்து சிலருக்கு கொடுக்க சொல்லி குழப்பும், சிலருக்கு ரசிகர் மன்ற கணக்கு, சிலருக்கு அரசியல் கணக்கு என ஏக கணக்குகள்
இந்நிலையில் கொஞ்சமும் அரசியல் கணக்கோ, ரசிகர் மன்ற அறுவடையோ எதுவுமின்றி உதவியிருப்பவர் அஜித்குமார்
மனிதர் பெப்சிக்கு 25 லட்சம், பிரதமர் நிதிக்கு 50 லட்சம், தமிழக அரசுக்கு 50 லட்சம் என கொடுத்திருகின்றார்
விளம்பரமில்லை, மாஸ்க் போட்டு கொண்டு காட்சியில்லை, வெட்டி வீடியோ இல்லை, ஆர்பாட்டம் துளியுமில்லை
யானை அள்ளி கொடுப்பது போல் அசால்ட்டாக கொடுத்துவிட்டார்
எந்த சமூகத்திடம் இருந்து எடுத்தோமோ அதே சமூகத்துக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை அவருக்கு இருந்திருகின்றது, அது எதிர்பார்ப்பு இல்லாமல் கொடுத்ததுதான் சிறப்பு
மழை போன்ற மனம் இது
தன் கடமையினை சிறப்பாக செய்து நல்ல இந்தியனாக, நல்ல குடிமகனாக, நல்ல வழிகாட்டி நடிகனாக நிற்கும் அஜித் குமாருக்கு வாழ்த்துக்க்கள்
“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது” என்பான் வள்ளுவன்
இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும்
அவர் மனம் போல் அவர் வாழட்டும், கடல் போல் நன்மைகள் அவரை சூழட்டும்❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️