சென்னை ஐஐடியில் பெண்கள் கழிவறையில் பைப் ஓட்டை வழியாக படம் பிடித்த உதவி பேராசியர்? பேரதிர்ச்சி?
✍?பெண்கள் கழிவறையில் பைப் ஓட்டை வழியாக படம் பிடித்த உதவி பேராசிரியர்… சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!
ஐஐடியில் பெண்கள் கழிவறையில் செல்போன் கேமரா வைத்துப் படம் பிடித்த உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஐஐடியில் கடந்த திங்கள்கிழமை ஏரோ ஸ்பேஸ்துறைக்கு சொந்தமான ஆய்வுக் கூடத்தில் உள்ள பெண்கள் கழிவறையை பயன்படுத்த சென்ற மாணவி ஒருவர் சுவற்றில் செல்போன் கேமரா போல் ஒன்று தெரிவிதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கூச்சலிட்டுள்ளார்.
சத்தம் கேட்டு வந்த நபர்கள் அருகே இருந்த அதே துறையை சேர்ந்த உதவிப்பேராசிரியராக பணிபுரியும் சுபம் பானர்ஜி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர் அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
சந்தேகத்தின் பேரில் அவரை ஐஐடி நிர்வாகத்தினர் போலீசில் ஒப்படைத்தனர்.
கோட்டூர்புரம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த சுபம் பானர்ஜி எனவும் ஏரோஸ்பேஸ் துறையில் ஆராய்ச்சி மாணவராகவும், உதவி பேராசிரியராகவும் பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது பெண்கள் கழிவறையில் உள்ள தண்ணீர் செல்லும் பைப்புகள் இடையே உள்ள ஓட்டையின் வழியாக செல்போனை வைத்து, பெண்கள் கழிவறைக்கு செல்லும் போது அவர்களை வீடியோ எடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
சம்பவத்தின் போது கையும் களவுமாக பிடிபட்ட சுபம் பானர்ஜி போனை ஆய்வு செய்த போது அதில் உள்ள அனைத்து வீடியோக்களையும் அவர் அழித்து இருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்கள் பாணியில் விசாரணை நடத்தியதில் பல பெண்களை வீடியோ எடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கோட்டூர்புரம் போலீசார் சுபம் பானர்ஜியயை நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.
எனினும் நீதிமன்ற விசாரணையின் போது அந்த செல்போன் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்பதால், அந்த செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோக்களை மீண்டும் எடுப்பதற்காக தடய அறிவியல் துறையிடம் அந்த செல்போனை போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
ஏற்கனவே பேராசிரியரின் துன்புறுத்தலின் காரணமாக கேரளா மாணவி ஃபாத்திமா லத்தீப் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தற்போது உதவிப் பேராசிரியர் ஒருவரே பெண்கள் கழிவறையில் ஆபாச படம் பிடித்தது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.