பாளைமறைமாவட்ட புதிய ஆயரை புதுமையான முறையில் வரவேற்ற,காமநாயக்கன்பட்டி பங்கு இறைமக்கள்?
பாளைமறைமாவட்ட புதியஆயரை புதுமையான முறையில் காமநாயக்கன்பட்டி பங்கு மக்கள் வரவேற்பு அளித்த அற்புதமான காட்சி. பாளைமறைமாவட்ட புதிய மேதகுஆயர் சவரிமுத்து அந்தோணிச்சாமி அவர்கள் வண்டானம் பங்கின் மண்ணின் மைந்தர். புதிய ஆயர் அவர்கள் ஆழ்ந்த பக்தி முயற்சியாலும் ,மக்களின் இறைசேவையில் வல்லவராகவும் வாழ்ந்த காரணத்தினால் புதியஆயராக போப் ஆண்டகையால் திருநிலைப்படுத்தப்பட்டார்.காமநாயக்கன்பட்டி பங்கிலிருந்த பிரிந்த வண்டானம் பங்கின் மண்ணின் மைந்தரான மேதகு ஆயர் சவரிமுத்து அவர்களுக்கு காமநாயக்கன்பட்டி பங்கு சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . புதுமையான முறையில் வானவேடிக்கைகளும் காமநாயக்கன்பட்டி இளைஞர்கள் நீளமான வரிசையில் நின்று, வண்ண ஒளி பதாகைகளுடனும் ,அழகிய வண்ண மிக நீளமான மேட்டுகளை விரித்து புதிய ஆயரை வரவேற்றனர். தீபங்களும் நறுமண புகளங்களும் பக்திமுயற்சிக்கு அடையாளமாக விளங்கினர் . புதிய ஆயர் பழைய சிந்தணைகளை நினைவுகூர்ந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்ந்தி ,விவிலிய உரைகளை நிகழ்த்தினார்.காமநாயக்கன்பட்டி பங்கு தந்தை அருட்திரு அருள்ராஜ் அவர்கள் பாளைமறைமாவட்ட புதிய ஆயரையும் ,மக்கள் அணைவரையும் வரவேற்றும் நன்றியுரையும் நிகழ்த்தினார் .துனை பங்கு தந்தை அல்போன்ஸ் பால்ராஜ் சின்னதுரை அவர்களும் அணைவருக்கும் நன்றி யுரை நிகழ்த்தினார்.அணைவருக்கும் அசனவிரிந்து உபசரிக்கப்பட்டது.