இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவை சூலூரில் பள்ளியில் வயிறுவலி கூறிவிட்டு விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை?

advertisement by google

கோவை மாவட்டம் சூலூர் பாப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார்.

advertisement by google

கோழிக்கடை இறைச்சி வியாபாரி. இவரது மகன் ஹரீஸ். இவர் காரமடை கண்ணார்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு கணினி அறிவியல் துறையில் படித்து வருகிறார். இவர் வியாழக்கிழமை மதியம் வகுப்பறையில் ஆசிரியரியர் இடம் வயிறு வலிப்பதாக கூறிவிட்டு விடுதிக்கு சென்றுள்ளார். பின்னர் மாணவர்கள் பள்ளி முடிந்து விடுதிக்கு மாலை நான்கு முப்பது மணிக்கு வந்து உள்ளனர். அப்போது விடுதியில் உள்ள மின்விசிறியில் மாணவர் ஹரிஷ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

advertisement by google

இதையடுத்து மாணவர்கள் பள்ளி நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரமடை காவல்துறையினர் உயிரிழந்த ஹரீஸின் உடலை கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் காரமடை காவல் நிலையத்திற்கு வந்த உறவினர்கள் காவல் துறையினரிடம் எங்களுக்கு உரிய தகவல் அளிக்காமல் ஹரீஸின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியது தொடர்பாக போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button