கோவில்பட்டி ,கயத்தாறில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு 945பேர் வேட்புமனுத்தாக்கல்?முழுவிவரம்?
கோவில்பட்டி, கயத்தாறில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல்: இறுதி நாளில் 945 பேர் வேட்புமனு தாக்கல்
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலில் இறுதி நாளான திங்கள்கிழமை கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு 945 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 68 பேர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்புமனு தாக்கல் செய்தனர். கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து 435 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 85 பேரும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 6 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதுபோல, கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து 60 பேரும், கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து 240 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 47 பேரும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 4 பேரும் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மொத்தத்தில், கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் இறுதி நாளான திங்கள்கிழமை 945 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.