கந்துவட்டி யினரின் அராஜகம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல்அப்பாஸ் கண்டனம்?
கந்து வட்டியினரின் அராஜகம் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
மதுரை , தத்தனேரி சிங்க பிடாரி கோவில் தெருவை சேர்ந்த குமார் என்பவர் அதே தெருவை சேர்ந்த என்ஜினீயர் நாகராஜீயிடம் 2014 ஆம் ஆண்டு 2 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கி வட்டி கட்டி வந்த நிலையில் வெற்று பத்திரத்தில் கையேழுத்து , மூலபத்திரம் ,அசல் பத்திரத்தையும் வாங்கி கொண்டும் நூதன மோசடி செய்து குமார் வீட்டை இடித்தும் கொலை மிரட்டல் விடுத்த கயவர்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது.
பாதிக்கபட்ட குமாரின் மணைவி பரமேஷ்வரி அவர்கள் காவல் துறை மாநகர கமிஷ்னர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களிடம் கொடுக்கட்ட புகார் மனுவை எற்று உடனடியாக நடவடிக்கை எடுத்து கந்து வட்டி நாகராஜனை கைது செய்த மாநகர கமிஷ்னர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம். அதை போல் இதில் சம்பந்தபட்ட அவரது கூட்டாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .
தமிழகத்தில் கந்து வட்டி தொல்லையினால் பலர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர் , இந்த மாதிரியான கொலை மிரட்டளுக்கு பயந்து போய் உயிருக்கு அச்சுறுத்தலாக வாழ்ந்து வரும் சுழல் உள்ளது ? ஆகையால் தலை விரித்தாடும் கந்து வட்டியை ஓழிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
எனவே : இடிக்க பட்ட கூலி தொழிலாளி குமார் வீட்டை மீண்டும் கட்ட உரிய இழப்பிடு வழங்க வேண்டும், இது போண்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க தமிழக அரசு சிறப்பு கவணம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.