மூணுநம்பர் லாட்டரியை ஒழிக்க தமிழக புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் காயல்அப்பாஸ் வலியுறுத்தல்?
தமிழகத்தில் மூணு நம்பர் லாட்டரியை ஓழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
விழுப்புரம் மாவட்டம், சித்தேரிக்கரை, சலாமத் நகரை சேர்ந்த அருண் மூணு நம்பர் லாட்டரி கடனால் பெரும் அளவிற்க்கு பாதிக்கபட்டு தனது மணைவி மூன்று குழந்தைகளுடன் சைனடு சாப்பிட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் மிகுந்த வேதணை அளிக்கிறது .
தமிழகத்தில் தடை செய்ய பட்டுள்ள லாட்டரி சிட்டை மீண்டும் மூணு நம்பர் லாட்டரி என்கிற பெயரில் சட்டத்திற்கு முரணாக விற்பணை செய்து பலரின் வாழ்க்கையை கேள்வி குறியாக்கி வருகிறார்கள் . இந்த சமூக விரோதிகளை கண்டறிந்து சட்டபடி கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
உயிரிழந்தோர்களின் குடும்பத்திற்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
எனவே : இந்த பரிதாபமான உயிரிழப்பிற்கு காரணமான மூணு நம்பர் லாட்டரி சிட் விற்பனையாளர்களை கைது செய்ய வேண்டும் . தமிழகத்தில் மூணு நம்பர் லாட்டரியை ஓழிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.