பெரியபாளையில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கு காவலன்செயிலின் செயல்விளக்கம் மற்றும் விழிப்புணர்ச்சி?
பெரியபாளையம் அருகே தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கு காவலன் செயலியை பயன் படுத்தும் முறை மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊத்துக்கோட்டை துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் தலைமையில் துணை ஆய்வாளர் மனோஜ் பிரபாகர் அவர்கள் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள காவலன் செயலியை பயன்படுத்தும் முறைகளைப் பற்றியும் அவற்றால் கிடைக்கும் பயன்பாடுகளைப் பற்றியும் ஆபத்தின் போது நம் இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் பயன்படுத்தியபின் தொடரும் நடவடிக்கைகள் போன்றவற்றை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கு தெளிவுபட எடுத்துரைத்தனர். மேலும் தலைக்கவசத்தின் அவசியத்தையும் தலைக்கவசத்தை பயன்படுத்தாமல் போனாள் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துரைத்தனர்.