இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கர்ப்பிணி என்று பார்த்தால் சேலைக்குள் ஏராளமான செல்போன்கள் ஷாக்கான ராத்திரி ரவுண்ட்ஸ் போலீஸ்?

advertisement by google

ராத்திரி ரவுண்ட்ஸ்.. திடீரென அவிழ்ந்த பானுவின் சேலை.. என்னா கில்லாடித்தனம்.. ஷாக்கான போலீஸ்!

advertisement by google

சென்னை: இரவு நேரத்தில் சுற்றி கொண்டிருந்தார் பானு.. திடீரென அவரது சேலை அவிழ்ந்துவிட்டது.. அப்போதுதான் பானுவின் மொத்த கேடித்தனமும் வெளிச்சத்துக்கு வந்தது.

advertisement by google

சென்னை திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கார்த்திகை தீப விழா கொண்டாடப்பட்டது. அந்த சமயத்தில், ஒரு பெண் அந்த பகுதியில் சுற்றி கொண்டே இருந்தார்.

advertisement by google

அவர் கர்ப்பிணி போல தெரிந்தார்.. வயிறு பெரிதாக இருந்தது.. ஆனாலும் ரொம்ப நேரமாக அங்கேயே ரவுண்டு அடித்து கொண்டிருக்கவும், ரோந்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

advertisement by google

அதனால், போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது வயிற்று பகுதியில் இருந்த சேலை திடீரென அவிழ்ந்துவிட்டது.. அப்போது ஏராளமான செல்போன்கள் கீழே விழுந்தன.. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், என்ன இதெல்லாம் என்று விசாரித்தனர். அப்போதுதான் அவை எல்லாமே திருட்டு செல்போன்கள் என்று தெரிந்தது.

advertisement by google

இன்றைய ஹாட் டாப்பிக்.. “மா. மஞ்சுளா”.. பரந்து விரிந்த நித்தியானந்தாவின் பக்தி சாம்ராஜ்ஜியம்!

advertisement by google

இந்த பெண்ணின் பெயர் பானு.. 40 வயதாகிறது.. கல்பாக்கத்தை சேர்ந்தவர்.. ஓடும் பஸ்ஸில் திருடுவதுதான் இவர் ஸ்பெஷல்.. மற்ற திருட்டில் ஈடுபடும் பெண்கள், சக பெண்களிடம்தான் வேலையை காட்டுவார்கள்.. ஆனால் பானு, ஆண்களிடமே அபேஸ் பண்ணிவிடுவாராம்.

advertisement by google

கோவில் திருவிழா கூட்டம் என்றால் பானுவுக்கு குஷியாம்.. இப்போது பானுவை கைது செய்த போலீசார் 5 செல்போன்கள் அவரிடமிருந்து மீட்டுள்ளனர்.. மடியில் கட்டியிருந்த அத்தனை செல்போன்களையும் விற்று காசாக்க முடிவு செய்திருந்தாராம்.. அப்போதுதான் போலீசில் சிக்கி உள்ளார்.

advertisement by google

Related Articles

Back to top button