கோவில்பட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைமைக்குழு உறுப்பினர் K.வரதராஜன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை?முழு விவரம்? விண்மீன்நியூஸ்
கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் தலைமைக்குழு உறுப்பினர் K.வரதராஜன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது .
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (AIKS) அகில இந்திய பொதுச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், K. வரதராஜன் நேற்று இயற்கை எய்தினார்.
இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவில்பட்டியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவரது திருவுருவ படத்திற்க மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் இராமசுப்பு, கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முத்துசாமி, தினேஷ்குமார், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் உமாசங்கர், நகரக்குழு உறுப்பினர் அந்தோணிச் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.