கோவில்பட்டியில் மாரடைப்பால் இறந்த சக காவலர் குடும்பத் திற்கு 2 லட்சம் உதவிசெய்து ஒன்று சேர்ந்த 2003 பேஜ் காவலர்கள்?
மோகன் வயது 37
S/o கதிர்வேல் சாமி வடக்குத்தெரு சுரைக்காய்பட்டி.
இவர் தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் 29.10.2019 ஆம் தேதி மாரடைப்பால் இறந்துவிட்டார். இவருக்கு மனைவி மகேஸ்வரி 28,
குழந்தைகள்
ஜீவராஜ் வயசு 8
லக்சனா வயது 6
ஆகியோர் உள்ளனர்.
இவருக்கு அரசாங்கத்தால் கிடைக்க வேண்டிய சலுகைகளும் பணம் பலன்களும் உடனடியாக கிடைக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வியே அவரது குடும்பத்தார் முன்வைக்கின்றனர்.
இவர் 2003 ஆம் ஆண்டு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். இவருக்கு பென்ஷன் கிடையாது. இவருடன் தமிழ்நாட்டில் மொத்தம் 8400 காவலர்கள் பணிக்கு சேர்ந்தனர்.
அதில் 160 காவலர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பணிபுரியும் 2003 பேச்சு காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வாட்ஸப் குழுவை உருவாக்கி அதில் இறந்த தன் நண்பர் மோகன் குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் ஏதாவது செய்ய வேண்டுமென்று தங்களால் முடிந்த அளவு பணம் வசூல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 2003 பேட்ஜ் தலைமை காவலர்கள் சிலர் தங்கள் பேட் ஜ் சர்பாக ரூ. 2 லட்சத்தை இன்று 17 10 2019 ஆம் தேதி அவரது சொந்த ஊரான சுரைக்காய்பட்டி கிராமத்திற்கு வந்து அவரது மனைவியிடம் ரூபாய் 2 லட்சத்தை வழங்கி சென்றனர்.
இந்தப் பண உதவியானது பென்சன் இல்லாத அவரது குடும்பத்திற்கு மிகவும் பேருதவியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. காவலர்களின் இச்செயல் அந்த கிராம மக்களிடையே ஒரு வித நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் படித்த அவரது மனைவிக்கு அரசாங்கத்தால் கருணை அடிப்படையில் வேலை கிடைக்க மாவட்ட காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தார்கள் கேட்டுக்கொண்டனர்.
???? நம்மை விட்டு பிரிந்து சென்ற நமது நண்பர் திரு மோகன் அவர்களுடைய குடும்பத்தினரை இன்று சந்தித்து நமது 2003 பேஜ் நண்பர்கள் சார்பாக ரூபாய் இரண்டு லட்சம் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்
??? இறைவா எங்கெங்கோ பிறந்தோம் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தார்போல் வளர்ந்தோம் பள்ளிப் பருவத்தையும் சிலர் கல்லூரி பருவத்தையும் கடந்து 2003 ஆண்டு காக்கி என்னும் ஒற்றைப்பணிக்குடையில் ஒன்றிணைந்து மாவட்டத்தில் மக்கள் பணி செய்து கொண்டிருக்கும் பொழுது சொற்ப வயதில் எங்கள் நண்பனை இழந்தோம் இழந்ததை எண்ணி வருந்துவது இதன்மூலம் ஒன்றிணைந்தது எண்ணி மகிழ்ச்சி அடைவதா என்று தெரியவில்லை இருப்பினும் எங்கள் முதல்படி வெற்றிப்படி ஒவ்வொரு ஆண்டும் எங்கள் நண்பனின் நினைவு தினத்தின்போது அவன் குடும்பத்தை அவன் குழந்தைகளை பார்க்க முயற்சி மேற்கொள்கிறோம் முடிந்தவரை எங்களை ஒன்றிணைக்க பாலமாக இருந்த பாலா அவர்களுக்கு நன்றி எங்கள் நண்பனின் ஆத்மா இதை பார்க்கட்டும் இறைவன் பாதத்தில் சாந்தியடையட்டும் எங்கள் முயற்சி வெற்றி அடைந்தமைக்கு நன்றி இறைவா?????