சொத்துக்காக அண்ணனை கொலை செய்த இரு சகோதரர்கள்.
advertisement by google
சென்னை மெரினா அருகே சொத்துக்காக உடன் பிறந்த அண்ணனையே கழுத்தறுத்து கொலை செய்த சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
advertisement by google
மெரினா அருகே அயோத்தியா நகரைச் சேர்ந்தவர் சக்தி வேல். மீனவரான இவருக்கு ஞானவேல், கந்தவேல் என்ற இரு சகோதரர்கள் உள்ளனர்.
advertisement by google
இந்தநிலையில் அண்மையில் அவர்களுக்கு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டதாகவும், அந்த வீடு யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக தகராறு நீடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
advertisement by google
நேற்றிரவும் இதுபோல் சண்டை ஏற்படவே, அப்போது குடிபோதையில் இருந்த சக்திவேலை சகோதரர்கள் இருவரும் சேர்ந்து ஆக்ஸா பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். அவர்கள் இருவரையும் பிடித்த ஐஸ் அவுஸ் போலீசார், மெரினா காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google