ஆறுஅறிவு மனிதர்களுக்கு ஓர்அறிவு எலுமிச்சையின் பணிவான வணக்கம்
ஆறு அறிவு மனிதர்களுக்கு ஓர் அறிவு எலுமிச்சையின்
பணிவான வணக்கம் !
நான் தான் எலுமிச்சம் பழம் பேசுகிறேன் !!
மனிதர்களாகிய உங்கள் உடல் நலனை பல வழிகளிலும் என்னால் காப்பாற்ற முடியும் ! நீங்கள் என்னை சாப்பிடுவதன் மூலம்…
- ஜீரண சக்தியை கூட்டுவேன்!
-உடல் கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுவேன்!
-உங்கள் ரத்தத்தை சுத்தம் செய்து தருவேன்!
-உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சலி இருமல் தொண்டை வலி உள்ளிட்ட குறை பாடுகளை எளிதில் நீக்குவேன்.
-உடலில் பித்த நீரை சுரக்க வைத்து மனிதர்களுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலையை விரைவில் குணப்படுத்துவேன்..!
-உங்கள் தோலுக்கு நல்ல பொலிவையும் அழகையும் மீட்டுத் தருவேன் !
-மூலநோய் காரணமாக வரும் ரத்தக் கசிவை தடுத்து நிறுத்துவேன்..!
-நுரையீரல் சீராக இயங்கி நீங்கள் எளிதாக சுவாசிக்க நான் பெரிதும் பயன் படுவேன்..!
-அதேபோல் உங்கள் ரத்தக் கொதிப்பையும் கட்டுப் படுத்த முடியும் - உடலில் பலச்சிக்கலுக்கு காரணமான மலச்சிக்கலை என்னால் எளிதில் நீக்க முடியும் ..!
- சாதரணமான நீங்கள் உண்ணும் காய்கறிகள் (சாலட்) செய்யும் போது சில துளிகள் என்னை பிழிந்து சாப்பிட்டால் அந்த காய்கறிகளின் இயல்பான சத்துக்களையும் சுவைுயையும் கூட நான் கூட்டிவிடுவேன் !
சுருக்கமாக சொல்வதானால் நான் உங்கள் வீட்டு சமையலறையில் இருக்க வேண்டியவன், பூஜையறையில் இல்லை ..!!
நான் மனிதர்களின் விலையில்லா மருத்துவம் !! காசில்லா மருத்துவர் !! உங்களது அன்பை பெருக்கும் ஆரோக்கியம் தான் நான் !!
மனிதர்களாகிய நீங்கள் தயவுசெய்து என் பிறப்பை அசிங்கப்படுத்த வேண்டாம் !!
எனக்கு எந்த விதமான தெய்வீக சக்தியோ மாய மந்திரம் பில்லி சூணியம் செய்யும் முட்டாள் தனமான ஆற்றல் எதுவும் என்னிடம் இல்லை !!
உங்கள் எல்லா வகையான வாகனங்களையும் எரிபொருள் மூலம் தான் இயக்க முடியும், என்னை வாகனத்தின் முன் கட்டி விடுவதால் உங்களுக்கு மிஞ்சுவது முட்டாள் தனம் மட்டுமே!!
நம்புங்கள் மனிதர்களே !! இந்தியாவின் பாதுகாப்பிற்காக மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் ரஃபேல் விமானத்திற்கும் வெறும் 5 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கும் சாதாரண எலுமிச்சம் பழத்திற்கும் எனக்கும் சிறிதும் தொடர்பில்லை…!!
நன்றி…. நன்றி….
அன்புடன்
ஓர் அறிவு எலுமிச்சம்பழம்!