இவிஎம் இல்லாமல் மோடியால் வெற்றி பெற முடியாது: மின்னணு வாக்குப்பதிவு இல்லாமல் மோடியால் வெற்றிப் பெற முடியாது. இது இந்திய ஒற்றுமை பயண நிறைவு விழாவில் ராகுல் பேச்சு
மும்பை: மின்னணு இயந்திரங்கள் இல்லாமல் மோடியால் வெற்றி பெற முடியாது என ராகுல்கூறினார்.
இந்திய ஒற்றுமை பயண நிறைவு விழா மும்பையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக முதல் வர் ஸ்டாலின், தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி,கர்நாடாக முதல்வர் சித்தராமயைா, காங்., தலைவர் கார்கே, மறறும் மற்ற கட்சி தலைவர்களான சரத்பவார் ,உத்தவ் தாக்கரே, பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதை மோடி நிறுத்தி விட்டார். மின்னணு இயந்திரங்களை அரசியல் கட்சிகள் முன்பு எடுத்துக்காட்ட தேர்தல் ஆணையம் மறுக்கிறது. மின்னணு தேர்தல் இயந்திரங்கள் இல்லாமல் மோடியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.
இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க முடியவில்லை.ஆனால், ஒரு திருமணத்திற்காக பத்தே நாட்களில் பன்னாட்டு விமான நிலையத்தை ஏற்படுத்தினார்கள்.
இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் தான் மோடி அரசை இயக்குகின்றனர். இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் தலித்கள் மற்றும் பழங்குடியினர் ஒருவர் கூட கிடையாது.லாபத்தில் இயங்காத பல நிறுவனங்களும் பா.ஜ.,வுக்கு நன்கொடை அளித்துள்ளது.
இந்தியாவில் பயன்படுத்தும் பொருட்களில் பெரும்பாலானவை சீன தயாரிப்பு தான். நீங்கள் நினைப்பதை நான் செய்வேன். இது அன்பை பரப்புகின்ற தேசம்.மத்திய அரசின் துறைகள் மூலம் யாத்திரையை முடக்க முயற்சி நடைபெற்றது. இவ்வாறு ராகுல் பேசினார்.
பா.ஜ.,வை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் : ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்திய ஒற்றுமை மற்றும் நீதிக்கான பயணத்தை நிறைவு செய்த ராகுலுக்கு எனது வாழ்த்துகள். ராகுலை எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றவர்; மக்களை பிளவுபடுத்தும் பா.ஜ.,வை விரைவில் ஆட்சியிலிருந்து அகற்றுவோம். என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பா.ஜ.,வை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் : ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்திய ஒற்றுமை மற்றும் நீதிக்கான பயணத்தை நிறைவு செய்த ராகுலுக்கு எனது வாழ்த்துகள். ராகுலை எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றவர்; மக்களை பிளவுபடுத்தும் பா.ஜ.,வை விரைவில் ஆட்சியிலிருந்து அகற்றுவோம். என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.????????????????????????????????????????????????????????மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இன்று ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் நிறைவு விழா நடைபெற்றது.இதில், இந்தியா கூட்டணியை சேர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உரையாற்றினார்.இப்போது அவர் பேசியதாவது:-இந்து மதத்தில் சக்தி என்ற வார்த்தை உள்ளது. ஒரு சக்திக்கு எதிராக நாம் போராடுகிறோம். அது என்ன சக்தி என்பது கேள்வி. ராஜாவின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இல்லாமல் மோடியால் வெற்றிப் பெற முடியாது. இது உண்மை.ராஜாவின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் மற்றும் நாட்டின் ஒவ்வொரு நிறுவனத்தின் ஆன்மா அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையிலும் உள்ளது.மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் காங்கிரசை விட்டு வெளியேறி என் அம்மாவிடம் கதறி அழுதார். ‘சோனியா ஜி, இந்த சக்தியை எதிர்த்துப் போராட எனக்கு தெம்பு இல்லை என்பதில் நான் வெட்கப்படுகிறேன். நான் சிறைக்குச் செல்ல விரும்பவில்லை’ என்றார். ஆயிரக்கணக்கான மக்கள் இப்படி அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.