கனவு மட்டுமே
காண்பவர்கள் தான்
தோற்கிறார்கள்
???????????????????????? பிறரை நேசிக்க தெரியாத மனிதனும் ………
பிறரால் நேசிக்கப்படாத மனிதனும்………..
வாழ்ந்து எந்தப் பயனும் இல்லை,……!!
????????????????????????தழும்புகள் ஒருபோதும் வலியை தருவதில்லை !*
ஆனால் , மீண்டும் மீண்டும் அன்று பட்ட வலியை உணர்த்துகிறது !
*மீண்டும் அடிபடாமல் இருக்க வழியை சொல்கிறது !!????????????விண்மீன்நியூஸ்????????????
நோக்கம் உயர்ந்ததாகவும் தெளிவானதாகவும் இருந்தால் வழிமுறைகள் என்னவாக இருந்தாலும் வெற்றி கிடைக்கும்.
வாராக்கடனை வசூலிப்பது ஒரு பெரிய தொழில். நம் ஊரைப் போலே அமெரிக்காவிலும் கடனை வசூலிக்கும் ஏஜெண்ட்கள் ( Collectors) ஏஜென்சிகள் ஏராளம். நம் ஊரைப் போன்றே அந்த ஏஜண்ட்களும் கடன் தவணை செலுத்த முடியாதவர்களை மரியாதைக் குறைவாகப் பேசுவதும் மிரட்டுவதும்தான் பெரும்பாலும் நடக்கும். ஏனெனில் அவர்கள் எவ்வளவு வசூலிக்கிறார்களோ அவ்வளவு கமிஷன் உண்டு.
அப்படி ஒரு ஏஜெண்டாகச் சேர்ந்தவர்தான் Christina Ann Harbridge. க்றிஸ்டினாவுக்கு அந்த வழிமுறைகள் ரொம்பவே உறுத்தலாக இருந்தன. ஏன் நாம் வாடிக்கையாளர்களிடம் இரக்கமாகப் பேசி அவர்கள் நிலையைப் புரிந்து கொண்டு வசூலிக்கக் கூடாது என எண்ணினார் . சில வருடங்களுக்குப் பிறகு தானே ஒரு கடன் வசூலிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார்.
அப்படி தொடங்கிய ஒரு நிறுவனம் தான் Bridgeport Financial Limited. அந்த நிறுவனத்தின் முதல் குறிக்கோளே கடன் பாக்கி வைத்தவர்களிடம் கனிவாகப் பேசி அவர்கள் நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். வசூலிக்கும் ஏஜெண்டுகள் எத்தனை அன்பாக நடந்து கொள்கிறார்கள் என பொதுமக்கள் பின்னூட்டம் தருகிறார்களோ அவ்வளவு கமிஷன்.
ஆரம்பத்தில் க்றிஸ்டினாவைப்பார்த்து எல்லாரும் சிரித்தார்கள். இதெல்லாம் பிரயோசனமில்லாத வழிகள் என்றனர்.
ஆனால் ஆச்சரியமான வகையில் அவரது நிறுவனம் மற்ற நிறுவனங்களைவிட மூன்று மடங்கு அதிகம் வசூல் செய்து சாதனை செய்தது. அது மட்டுமல்ல கடன் வாங்கிய நிறுவனங்களே கடன் பாக்கியைச் செலுத்தியவர்களுக்கு மீண்டும் கடன் கொடுத்தன. இது முன்னெப்போதும் இல்லாத ஒரு நிகழ்வாக இருந்தது.
நோக்கம் தெளிவாக இருந்தால் வழிமுறைகள் தானே பிறக்கும்.
- Simon Sinek எ
- டாக்டர் ஜி ராமானுஜம்