சென்னை: பாஜகவுக்கு தாமரைச்சின்னம் வழங்கப்பட்டதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி வழக்கு தொடுக்கும் என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டினார்.
எனினும், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர்தான் பாஜகவுக்கு தாமரைச் சின்னம் வழங்கப்பட்டது தொடர்பாக வழக்கு தொடுக்கப்படும் என்றார் சீமான்்.
“இந்தியாவின் தேசிய மலராக தாமரை நீடிக்கும் பட்சத்தில் பாஜகவின் சின்னம் மாற்றப்பட வேண்டும்.
“அங்கீகாரம் இல்லாத கட்சிகளில் பாமகவும் ஒன்று. ஆனால் அக்கட்சிக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியுள்ளனர். இது எவ்வாறு சாத்தியமானது, “உண்மையில் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி தான். இதை உணர்ந்தே எங்களுடைய வாக்கு விகிதத்தை குறைப்பதற்கு சதி நடக்கிறது,” என்றார் சீமான்.