இந்த படத்துல உங்களுக்கு முதல்ல எது தெரியுது-ன்னு சொல்லுங்க.. உங்க கேரக்டர் பத்தி சொல்றோம்..
இணையத்தில் மனதைக் கவரும் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒருவரை சிந்திக்க வைக்கும் ஒருவித புதிர் ஆகும். அதாவது சோர்ந்து போயிக்கும் மூளைக்கு வேலையைக் கொடுக்கும் வகையில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருக்கும். இந்த படங்கள் ஒருவரது மூளையை சிறப்பாக செயல்படத் தூண்டும் மற்றும் ஒருவரது கவனத்தை அதிகரிக்க உதவும். முக்கியமாக டென்சனாக மற்றும் ஒருவித மன அழுத்தத்தில் இருக்கும் போது, இம்மாதிரியான படங்களைப் பார்த்தால், அவை மனதை ரிலாக்ஸாக்கும்.
எப்படியெனில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பலவிதமான படங்கள் ஒளிந்திருக்கும். இவற்றில் ஒருவரது கண்களுக்கு முதலில் எந்த படம் தெரிகிறதோ, அது அவரது ஆளுமையை/குணாதிசயங்களைப் பற்றி தெரிவிக்கும். அப்படி ஒருவரது குணாதியங்களைப் பற்றி தெரியப்படுத்தும் ஒரு அற்புதமான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் உங்களுக்கு முதலில் எது தெரிகிறது என்று கூறுங்கள், உங்களின் குணாதியம் எப்படி இருக்கும் என்பதை நாங்கள் கூறுகிறோம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு மரத்திற்கு அடியில் சிங்கங்கள் இருப்பது போன்ற காட்சி உள்ளது. ஆனால் இந்த படத்தில் ஒரு முகம் மறைந்துள்ளது. அதுவும் அந்த மரக்கிளைகளில் மறைந்துள்ளது. இந்த படத்தில் ஒருவர் முதலில் எதை பார்க்கிறார்களோ, அது அந்நபரின் ஆளுமையைப் பற்றி வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. மனதை நெகிழ வைக்கும் இந்த படத்தின்படி, இரண்டு வகையான மக்கள் உள்ளனர். அதில் முதல் வகை மரத்தைப் பார்ப்பவர்கள். இரண்டாவது வகையினர் சிங்கத்தின் முகத்தைப் பார்ப்பவர்கள். உங்களுக்கு முதலில் எது தெரிகிறது என்று கூறுங்கள்.
ஒருவேளை உங்கள் கண்ணில் முதலில் மரம் தெரிகிறது என்றால், நீங்கள் தனிமை விரும்பிகள். எப்போதும் தனிமையில் இருக்கவே விரும்புவீர்கள், மற்றவர்களுடன் அதிகம் பழக விரும்பமாட்டீர்கள். மேலும் வெளியே அதிகம் சுற்ற விரும்பமாட்டீகள். எப்போதும் வீட்டிலேயே இருக்க விரும்புவீர்கள். மேலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்கும் போது, எதிர்மறை எண்ணங்கள் வந்து, உங்கள் சந்தோஷத்தைக் களைந்துவிடும். மறுபுறம், உங்களுக்கு முதலில் சிங்கத்தின் முகம் தெரிகிறதென்றால், சமூக ரீதியாக ஒதுங்கியவர்களாகவும், சிறு பேச்சுக்களையும் விரும்பாதவர்களாகவும் இருப்பீர்கள். எப்போதும் சற்று விலகியே இருப்பீர்கள். ஆனால் உங்களுடன் ஒருவர் நன்கு புரிந்து நடந்து கொள்ளும் போது, அவர்களிடம் உங்களின் உண்மையான நடத்தையை வெளிக்காட்டுவீர்கள்.