கிரைம்
வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறிய 3 நாய்கள்.. கொடூர சம்பவத்தின் பின்னணி
advertisement by google
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை 3 நாய்கள் கடித்து குதறிய கொடூரம் நிகழ்ந்துள்ளது.
advertisement by google
அதிராம்பட்டினம் சதாம் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ரிஸ்வான் அலி – தஸ்லிமா தம்பதியின் 3 வயது மகன் ஆதிஸ். தஸ்லிமா சமைத்துக் கொண்டிருந்த போது தெருவில் சுற்றித்திரிந்த 3 நாய்கள், திடீரென வீட்டிற்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் மீது பாய்ந்து கடித்து குதறியுள்ளன.
advertisement by google
வலியால் அலறித் துடித்த சிறுவனை மீட்டு அருகில் இருந்தவர்கள் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவன் ஆதிஸுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலை மற்றும் கண் பகுதியில் நாய்கள் கடித்ததில் சிறுவன் வலியால் அலறித் துடித்தான்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google