கிரைம்தமிழகம்

மீடியனில் மோதி ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து.. அலறித் துடித்த பயணிகள்…!!

advertisement by google

தமிழகத்தில் நவம்பர் 21ம் தேதி நேற்று இரவு ஆம்னி பேருந்து ஒன்று சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னார்குடிக்கு சென்று கொண்டிருந்தது.

advertisement by google

இன்று காலை மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அருகே வந்த போது குறுகிய திருப்பம் ஒன்று இருந்தது. அதில் வைக்கப்பட்ட செண்டர் மீடியனை ஓட்டுனர் கவனிக்காமல் வண்டியை தொடர்ந்து ஓட்டிக் கொண்டிருந்தார்.அவருடைய கவனக்குறைவு காரணமாக பேருந்து செண்டர்மீடியனில் மோதி கோரவிபத்து ஏற்பட்டது. அதனால் வேகமாக வந்த பேருந்து சென்டர் மீடியனில் மோதி சாலையில் ஒருபக்கமாக சாய்ந்தது. இதனால் பேருந்தில் பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். பேருந்து ஓட்டுனர் இம்தியாஸ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அந்த பக்கமாக சென்று கொண்டிருந்தவர்கள் இந்த விபத்தை பார்த்து உடனடியாக ஓடி வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவருமே காயமின்றி தப்பினர். படுகாயம் அடைந்த ஓட்டுனரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button