இது தெரியுமா ?நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவதால் “நம் துன்பங்கள் நீங்கி இழந்த அனைத்தும் மீண்டும் வரும்..!
நெல்லிக்காயில் நெய் விளக்கு ஏற்றுவது அவ்வளவு நல்லதாம். ஏன் தெரியுமா? நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவதால் “நம் துன்பங்கள் நீங்கி இழந்த அனைத்தும் மீண்டும் வரும்” என்பது ஜதீகம்.
எவ்வாறு நெல்லிக்காய் விளக்கு ஏற்றுவது. முதலில் காட்டு நெல்லிக்காயை வாங்கி மேற்புறமாக சற்று பள்ளமாக தோண்டி கொள்ளுங்கள்.
அதே போன்று கீழ்புறமும் சற்று தட்டையாக இருக்கும் அளவிற்கு வெட்டி எடுத்து விடுங்கள். பின்னர் காட்டன் திரி கொண்டு நெய்யில் நனைந்து, பின்னர் அதனை நெல்லிக்காயில் வைத்து விளக்கேற்றுங்கள். இவ்வாறு விசேஷ நாட்களில் இது போன்று விளக்கு ஏற்றினால், இழந்ததை மீண்டும் பெற முடியும் என்பது ஐதீகம்.
இந்த தீபத்தை ஒருமுறை ஏற்றிய பின்பு உங்களுடைய மனதில் திருப்தியும், தன்னம்பிக்கையும் அதிகரித்தால் இந்த வழிபாட்டை உங்களுடைய வீட்டில் தொடர்ந்து செய்து வரலாம். அதாவது செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினம், அமாவாசை தினம், இப்படி இந்த பூலோகத்திற்கு பிரபஞ்சத்தின்
சக்தியை அதிகமாக ஈர்த்துக் கொடுக்கக்கூடிய விசேஷ தினங்களில் இந்த தீபத்தை ஏற்றுவது மிகவும் சிறப்பானது.
உங்களுடைய வீட்டில் துளசி செடி இருக்கும் பட்சத்தில், துளசி செடிக்கு இந்த நெல்லிக்கனி தீபத்தை ஏற்றி வைத்தால், வீட்டில் இருக்கும் கஷ்டம் 3 வாரங்களில் குறைவதை கண்கூடாக பார்க்கலாம். அதாவது வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமையில் மட்டும் துளசி செடிக்கு முன்னால் நெல்லி தீபம் போட்டு பாருங்கள்.நம்பிக்கையோடு நெல்லிக்காய்களை கொண்டு இரண்டு தீபங்களை உங்களுடைய வீட்டில் ஏற்றி பாருங்கள். உங்களுடைய வீட்டின் அருகில் மகாலட்சுமி சன்னிதானம் கொண்ட கோவில் இருந்தால், அந்த கோவிலில் இந்த நெல்லிகாய் தீபங்களை ஏற்றினால் மேலும் நல்ல பலனைப் பெறமுடியும்