வழுக்கி விட்டதா டைல்ஸ் ? ஈட்டியில் சொறுகிய கழுத்து… கடவுளே இப்படியும் சாவு வருமா?
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே டைல்ஸ் வழுக்கியதால் நிலை தடுமாறிய போது ஈட்டி போன்ற கிரில் கம்பி தலையில் குத்தியதால் ஓட்டுனர் பலியான சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கிராம சேவைமைய கட்டிடத்தை சுற்றி அமைக்கப்பட்ட ஈட்டு போன்ற கிரில் கம்பிகழுத்தில் குத்தியதால் தலைமாட்டிக்கொண்டு ஒருவர் சடலமாக நிற்ப்பதாக பொன்னமராவதி காவல்துறையினருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு பொன்னமராவதி காவல்துறையினர் விரைந்து வந்தனர்.
விசாரணையில் கம்பி குத்தி இறந்தவர் வையாபுரிபட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பதும் குளிர்பான கம்பெனி ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்ததும் தெரிய வந்தது. ராஜேந்திரனின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொப்பனாபட்டிக்கு சரக்கு கொண்டு சென்ற போது வாகனம் பழுதானதால், படுப்பதற்காக கிராம சேவை மையத்திற்குள் சென்றுள்ளார். உள்ளே தரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் வழுக்கியதில் நிலை தடுமாறி கேட் கம்பியில் முன்பக்கமாக சாய்ந்த போது அதுவரது கழுத்தில் குத்தி ராஜேந்திரன் உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அதே நேரத்தில் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றிய பொன்னமராவதி போலீசார் யாராவது அவரை பிடித்து கம்பியில் தள்ளி விட்டார்களா ? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.