லாரி மீது லாரி மோதல் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பரிதாபம்? கிளினர் உட்பட இருவர் பலி? முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நான்கு வழிச்சாலையில் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த லாரி மோதியதில் கிளினர் உட்பட இருவர் பலியாயினர்.
விருதுநகர் மாவட்டம் கே. செவல்பட்டி
கண்மாய் அருகே மதுரையில் இருந்து தூத்துக்குடி சென்ற
செங்கல் ஏற்றி சென்ற லாரி பஞ்சர் ஏற்பட்டது சாலையோரத்தில் பஞ்சர் பார்க்கும் பணி ஈடுபட்டபோது
அதே திசையில்
மினி லாரி வாகனம்
(காய்கறி வாகனம் )
அதிவேகமாக லாரியின்
பின்பக்கம் மோதியதில் செங்கல் லாரியின் பின்னால் நின்று கொண்டு
இருந்த ராஜாங்கம்
என்பவர் டயருக்கு அடியில் அடிபட்டு நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாரிமுத்து,முரளி ஆகியோரை காயங்களுடன் மீட்கப்பட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் அங்கு முதலுதவி செய்யப்பட்டு இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டன செல்லும் வழியில் மாரிமுத்து என்பவர் உயிரிழந்தார்.விபத்து உருவாக்கிய வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.??