உலக செய்திகள்

தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும், சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டுக்கு தொழில் நிறுவனங்களின் அதிபா்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் , தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்களுடன் ஆலோசனை✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

advertisement by google

தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும், சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டுக்கு தொழில் நிறுவனங்களின் அதிபா்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூருக்கு செவ்வாய்க்கிழமை சென்றடைந்தாா்.

advertisement by google

இந்நிலையில், சிங்கப்பூர் அமைச்சர்கள், முன்னணி தொழில் நிறுவனமான டெமாசெக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திலன் பிள்ளை சந்திரசேகரா மற்றும் செம்கார்ப் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கிம்யின் ஒங் ஆகியோருடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

advertisement by google

இந்த ஆலோசனையின்போது தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

advertisement by google

மொத்தம் 9 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், சிங்கப்பூரை தொடர்ந்து ஜப்பான் நாட்டுக்கு செல்லவுள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button