கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில், மனித கல்லீரல் பற்றிய, விழுப்புணர்வு மற்றும் கருத்தரங்க முகாம்✍️உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் ,கல்லீரல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், Dr அபிநயா MD தலைமையில்,மருந்தாளுனர் முத்துலட்சுமி அவர்களின் உதவியுடன், படங்களை கொண்டு கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு முகாம்✍️ ஆரோக்கியமான கல்லீரல், ஆரோக்கியமாக வாழுங்கள் என்ற தலைப்பில்✍️ பொது மக்கள் பங்கேற்பு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில் கல்லீரல் விழுப்ப புணர்வு மற்றும் கருத்தரங்கம் ,உலகம் முழுவதும் இன்று (19-ந்தேதி) உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்படுகிறது. கல்லீரல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் கல்லீரல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனை சித்த மருத்துவு பிரிவு சார்பில் Dr அபிநயா MD தலைமையில், மருந்தாளுனர் முத்துலட்சுமி அவர்களின் உதவியுடன், படங்களை கொண்டு கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு முகாம்.பொது மக்கள் பங்கேற்பு.
உலகின் பலகோடி மக்கள் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கல்லீரல் நோயால் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் பாதிப்பு அடைந்துள்ளார்கள். நம்முடைய உணவு பழக்கவழக்கங்களில் கல்லீரலின் பாதிப்புக்கள் என்ன? மற்றும் மதுவினாலும் , துரித உணவுகள், புகையிழைப்பொருட்களினாலும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து உண்ணும் பழக்கம், போன்றவற்றினால் கல்லீரல் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, ‘ஆரோக்கியமான கல்லீரல் ஆரோக்கியமாக வாழுங்கள்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது