ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும், வெற்றி மிக பிரகாசமாக உள்ளது, ஓரிரு நாளில் வெற்றி வேட்பாளர் அறிவிக்கப்படுவார், கோவில்பட்டிகம்மாவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழா நிழச்சிக்கு கலந்துகொள்ள வரும் வழியில் கோவில்பட்டி MLA கடம்பூர் ராஜீ அவர்களுடன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் பரபரப்பான பேச்சு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
கோவில்பட்டியில் கம்மாவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழா நிழச்சிக்கு கலந்துகொள்ள கோவில்பட்டிக்கு, கோவில்பட்டி MLA கடம்பூர் ராஜீ அவர்களுடன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜீகே வாசன் அவர்கள் கலந்துகொள்ள வரும்போது பரபரப்பான பேச்சு ,ஈரோடு இடை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்; ஜி.கே. வாசன் நம்பிக்கை
ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி மிக பிரகாசமாக உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் வெற்றி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியை ஆதரிக்கக் கூடிய கட்சிகள் உரிய காலத்திற்குள் அதிகாரப் பூர்வமாக ஆதரிப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
திமுக ஆட்சி மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது.கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை,திமுக கொடுத்த வாக்குறுதி களை நம்பி காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் ஆட்சிக்கு எதிரான ஓட்டுகள் அதிகரித்து வருகிறது. எங்கள் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை கருத்தில் கொண்டு அதிமுகவிற்கு விட்டுக் கொடுத்தோம் என்றார் ஜிகே வாசன் அவர்கள்.