சசிகலா அதிரடி✍️இம்மாதம் 27ம் தேதி விடுதலையாகும் சசிகலா அன்று இரவு ஓசூரில் தங்கிவிட்டு, மறுநாள் 28 தேதி காரில் சென்னைப்புறப்பட்டு வருவதாக தகவல்✍️வந்துட்டேன்னு சொல்லு✍️பாகுபலி எபஃட்டாகும் சசிகலாவின் வருகை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
சசிகலா அதிரடி
வந்துட்டேன்னு சொல்லு
இம்மாதம் 27ம் தேதி விடுதலையாகும் சசிகலா அன்று இரவு ஓசூரில் தங்கிவிட்டு, மறுநாள் 28 தேதி காரில் சென்னைப்புறப்பட்டு வருவதாக தகவல்.
தமிழக – கர்நாடக எல்லையில்
சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். மேலும் ஓசூரில் இருந்து சென்னைக்கு புறப்படும்போது அந்த வழியனுப்பு விழாவை தடபுடலாக நடத்த முடிவெடுத்திருக்கிறது அமமுக.
இதற்கு பேனர், கட் அவுட் வைப்பதற்கு அனுமதி கேட்க ஆம்பூர் வட்டாட்சியரிடன் அனுமதி கோரி எழுதப்பட்டிருக்கும் கடிதம்தான் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த அனுமதி கோரும் கடிதத்தில், அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா, பெங்களூரில் இருந்து ஆம்பூர் வழியாக சென்னை செல்ல உள்ளதால் பிளக்ஸ் போர்டு வைக்க அனுமதி கோருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பாலசுப்பிரமணி தலைமையில் சசிகலாவுக்கு வழியனுப்பு நடத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், ‘அனைத்திந்திய அண்ணா
தி.மு.கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா’ என்று இருப்பதால் அதிமுகவில் சலசலப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.
அனுமதி கிடைக்குமா.
எடப்பாடி என்ன செய்யப்போகிறார். ஏன்னா இதற்கு அனுமதி கொடுத்தா அடுத்ததா சசிகலா..
இதையும் செய்யலாம்என்கின்றனர் சசிகலா ஆதரவாளர்கள் அதாவது
பிப்ரவரி முதல் வாரத்தில் பொதுச்செயலாளர் உரிமை கோரும் நடவடிக்கை எடுப்பார் என்கின்றனர். இதன்படி மனுதாரர் என்ற முறையில் 3 REMINDER NOTICE களை ஆணையத்தில் முறையிடுவார் என்றும் இதில் எதேனும் ஒன்றை அனுப்பினாலும் கூட அதிமுக வின் மொத்த ஆட்டமும் காலி.
- B-FORM ல் கையெழுத்திடும் உரிமை கோரி.
- பொது செயலாளர் என்ற முறையில் கட்சி நிர்வாகிகளை மாற்றி அமைக்கும் உரிமைகளை கோரி.
- பொது செயலாளர் என்ற உரிமையின் மீது காசோலையில் கையெழுத்திடும் உரிமை கோரி.
இந்த REMINDER NOTICE களில் எதேனும் ஒன்றேனும் தேர்தல் ஆணையத்தினால் உரிமை வழங்கப்பட்டால் அதிமுக வின் ஆட்டம் காலி.
ஆணையம் என்ன செய்யப் போகிறது என்ற நிலையும் உருவாகி இருக்கிறது…
என்கின்றனர் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் பலரும்….