என்னுடைய 9ஆம், 10ஆம், வகுப்பு பள்ளி ஆசிரியர் காசிபாரதி ஆசிரியர் அவர்களின் தகப்பனார், தோழர் நல்லகண்ணு ஐயாவிற்கு பிறந்தநாள் (26.12.1925) வாழ்த்துகிறதுவிண்மீன்நியூஸ்✍️இப்படிக்கு✍️ஆசிரியர் எழுத்தாளர் வெளியீட்டாளர் விண்மீன் .T.A.விண்சென்ட் MScBEd,விண்மீன்நியூஸ்,விண்ணொளிநியூஸ்✍️?
தோழர் நல்லகண்ணு ஐயாவிறகுப் பிறந்தநாள்
(26.12.1925)
வாழ்த்துவோம்..!
திருநெல்வேலி மாவட்டம்..
சிறீவைகுண்டத்தில்
1925இல் பிறந்த
நல்லகண்ணு அவர்கள் 18 ஆவது அகவையிலேயே
இந்தியப் பொதுவுடைமைக் (கம்யூனிசுடு) கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
சிறீவைகுண்டம்
பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல் வைத்திருப்பதைக் கண்டுபிடித்து
சனசக்தி இதழில் எழுதினார்.
அதைப் படித்த மாவட்ட ஆட்சியர்,உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார்.
இவருடைய முதல் நடவடிக்கை என்று பார்த்தால் இதுதான்.
இனிமேல் மக்களுக்காக முழு நேரமும் உழைப்பது என்று முடிவெடுத்தார்.
அப்பாவிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.
பொதுவுடைமைக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்ட போது நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ஏழு ஆண்டுகள் இருட்டறை வாழ்க்கை…
“நாங்கள் வெளியில் வந்த போது நாடு
விடுதலை அடைந்திருந்தது.
அன்று தொடங்கிய அரசியல் பயணம் இன்று வரை தொடர்கிறது..”
என்கிறார் தோழர்.