தமிழகத்தில் அடிப்படை வசதியில்லா மனைகள்: கிடுக்கிப்பிடி போட்டது தமிழக அரசு✍️புதிதாக உருவாக்கப்படும் மனைப்பிரிவுகளில், சாலை, குடிநீர், வடிகால் வசதிகளை முடித்த பிறகே, விற்பனையை துவங்கும் வகையில், தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள்✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
✍?அடிப்படை வசதியில்லா மனைகள்: கிடுக்கிப்பிடி போட்டது தமிழக அரசு
புதிதாக உருவாக்கப்படும் மனைப்பிரிவுகளில், சாலை, குடிநீர், வடிகால் வசதிகளை முடித்த பிறகே, விற்பனையை துவங்கும் வகையில், தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
தமிழகத்தில், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உருவாக்கும் மனைப்பிரிவுகளில், மனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இதில், பல இடங்களில் உரிய அடிப்படை வசதிகளை செய்யாமல், மனைகள் விற்கப்படுகின்றன.
இவற்றை வாங்கும் மக்கள்கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சிக்கல் ஏற்படுகிறது.
இந்நிலையில், 2019 பிப்ரவரி, 4ல் பொது கட்டட விதிகள் அறிவிக்கப்பட்டன.
இதில், மனைப் பிரிவுகள் உருவாக்கத்துக்கு, பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில், சில நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதாக கூறப்பட்டது.
இதுகுறித்து ஆராய்ந்த தமிழக அரசு, நடைமுறைகளை எளிமைபடுத்தி, புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இதற்கான, அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
மனைப்பிரிவுகளை உருவாக்குவோர், சாலை, பூங்கா, மற்றும் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிலங்களை, கொடை ஆவணம் வாயிலாக, சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு ஒப்படைக்கப்படும் நிலங்களை, சம்பந்தப்பட்ட துறைகள், தங்கள் கட்டுப்பாட்டில் எடுப்பதும், பயன்படுத்துவதும் சிக்கலாக உள்ளது.
எனவே, சாலை உள்ளிட்ட பல்வேறு, பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிலங்களை, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பதிலாக, உள்ளாட்சி அமைப்பிடமே ஒப்படைக்கலாம்.
இந் நிலங்களை கட்டுப்பாட்டில் எடுத்த பின், அங்கீகாரம் தொடர்பான, இறுதி உத்தரவை உள்ளாட்சிகள் வழங்க வேண்டும்.
மேலும், மனைப்பிரிவுகளில் தார் சாலை, குடிநீர், வடிகால் அமைப்புகள், மின்சார இணைப்புக்கான வழித்தடங்கள் ஆகியவற்றை ஏற்படுத்திய பின் தான், உள்ளாட்சிகள் இறுதி உத்தரவை வழங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவால், அடிப்படை வசதிகள் செய்யாமல், வீட்டு மனைகளை விற்பது தடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகி றது.