இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் ஏர்கலப்பை பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் 34 பேர் கைது ✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டியில் ஏர்கலப்பை பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் 34 பேர் கைது

advertisement by google

மத்தியரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திருத்தினை கண்டித்தும், ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கேசவன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்று ஏர்கலப்பை பேரணி நடந்த முயன்றனர். எஸ்சி எஸ்டி பிரிவு மாநில துணைத் தலைவர் மாரிமுத்து, ஐஎன்டியூசி மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசேகர், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் மாரியம்மாள், பட்டதாரிகள் பிரிவு மாவட்ட தலைவர் அருண் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் வட்டார தலைவர் இமானுவேல் ,அய்யாதுரை, முன்னாள் எஸ்சி எஸ்டி மாவட்ட தலைவர் சின்னப்பன், தூத்துக்குடி மாநகர் தலைவி முத்து விஜயா, தர்மர், அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவர் கருப்பசாமி, ஐஎன்டியூசி பழனிச்சாமி, ஐ.என்.ஆர்.எல்.எப். பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பயணியர் விடுதி முன்பு ஊர்வலமாக வந்த காங்கிரஸ் கட்சியினரை போலீசாh தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் மத்தியரசினை கண்டித்தும், வேளாண்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 14பெண்கள் உள்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button