மூன்று கொரோனா ஊசி மருந்துகளை அங்கீகரித்துள்ள உலக சுகாதார அமைப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
மூன்று கொரோனா ஊசி மருந்துகளை அங்கீகரித்துள்ள உலக சுகாதார அமைப்பு
கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மூன்று தடுப்பு மருந்துகளுக்கு உலக சுகாதார அமைப்பின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.
ஃபைசர் அறிமுகப்படுத்திய ஊசி மருந்து, மொடர்னா ஊசி மருந்து மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய அஸ்ட்ராஜெனெகா ஊசி மருந்து ஆகியவற்றை அங்கீகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
ஃபைசர் ஊசி மருந்து ஏற்கனவே பிரித்தானியாவில் பயன்பாட்டில் உள்ளதுடன் மேலும் பல நாடுகள் இந்த ஊசி மருந்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.
மொடர்னா ஊசி மருந்து ஏற்கனவே அமெரிக்க மருத்துவ அதிகாரிகளால் பல மில்லியன் மக்களுக்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மூன்று ஊசி மருந்துகளுக்கு மேலதிகமாக, ரஷ்ய மருத்துவ நிபுணர்கள் ஸ்பூட்னிக் வி என்ற ஊசி மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளனர், மேலும் சீனாவும் மற்றொரு ஊசி மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அ.சா.அலாவுதீன்.
மண்டல முதன்மை செய்தியாளர்