நடிகர் விஜய்க்கும், அவரது தந்தைக்கும் இடைய நடந்த பிரச்சனை என்ன✍️அவரது தாயின் அன்பான அறிக்கை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
நேற்று மாலை, தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகரான விஜய் ‘ அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ‘ என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில், ஒரு கட்சியைப் பதிவு செய்துள்ளார் என்று பரபரப்பாக தகவல் வெளியானது.
இந்தக் கட்சியை விஜய் துவங்கவில்லை, அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் துவங்கியுள்ளார் என்று அதன்பின் தகவல்கள் வெளியானது.
ஆனால் தீடீர் திருப்பமாக, அந்தக் கட்சிக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் தனது ரசிகர்கள் அந்தக் கட்சியில் இணைய வேண்டாம் என்றும் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் இதனைத் தொடர்ந்து விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் அவர்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் பேட்டி கொடுத்துள்ளார்.
அரசியல் பேச வேண்டாம் என்று பலமுறை கூறியும் எஸ்.ஏ. சந்திரசேகர் கேட்கவில்லை என்பதால், அவரிடம் விஜய் பேசுவதில்லை “.
அசோசியேஷன் தொடங்குவதாகவே என்னிடம் கையெழுத்து பெற்றார் எஸ்.ஏ.சி. கட்சி தொடங்குவதற்காக 2 வது முறை கையெழுத்து கேட்ட போது நான் போடவில்லை “.
நான் எஸ்.ஏ. சந்திரசேகர் துவங்கியுள்ள கட்சியில் நான் பொருளாளராக இல்லை, விலகி விட்டேன்.
எதிர்காலத்தில் அரசியல் கட்சி தொடங்குவது, குறித்து விஜய் தான் முடிவெடுக்க வேண்டும் “. என்று கூறியுள்ளார் ஷோபா.
இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.