கைதியை தப்பவிட்ட உதவி ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் – மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நடவடிக்கை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கைதியை தப்பவிட்ட உதவி ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் – மாவட்ட எஸ்பி நடவடிக்கை
✍புதியம்புத்தூர் காவல்நிலைய திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட எதிரியை தப்ப விட்ட உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
✍தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் நிலைய இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான புதியம்புத்தூர் நடுவக்குறிச்சியை சேர்ந்த நாகராஜ் மகன் மாயகிருஷ்ணன் என்ற தெய்வகுழந்தை என்பவரை கடந்த 20.09.2020 அன்று கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பேரூரணி சிறையில் அடைக்க சென்று கொண்டிருந்தபோது மேற்படி மாயகிருஷ்ணன் என்ற தெய்வகுழந்தை போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி விட்டார். மீண்டும் தனிபடையினரால் 22.09.2020 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
✍இதனையடுத்து மாயகிருஷ்ணன் என்ற தெய்வக்குழந்தை தப்பி ஓடிய போது கைதி வழிக்காவல் பணியில் அசட்டையாக பணிபுரிந்த புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் காவலர் சுடலைமுத்து ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.