நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில் கோவில்ப்பட்டியில் ஆர்ப்பாட்டம் ?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் 13 மாணவர்களின் மரணத்திற்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவர் படிப்பிற்கான சேர்க்கை நடைபெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் மன்ற மாநில துணை செயலர் ராமசாமி தலைமை வகித்தார். இளைஞர் பெருமன்ற தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் பாலமுருகன், மாணவர் மன்ற மாநிலக்குழு உறுப்பினர் ரஞ்சன்கண்ணம்மா, இளைஞர் பெருமன்ற வட்டச் செயலர் பாபு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கையில் தூக்கு கயிறை கையில் ஏந்திய படி கோஷங்களை எழுப்பினர். இதில் அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்ற உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.