கோவில்பட்டி அருகே காட்டு முயலை வேட்டையாட முயன்ற இருவர் கைது ?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
காட்டு முயலை வேட்டையாட முயன்ற இருவர் கைது
கோவில்பட்டி அருகே காட்டு முயலை வேட்டையாட முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோவில்பட்டி வனச்சரக அலுவலர் சிவராம் தலைமையில், வனவர் நாகராஜ், வனப்பாதுகாப்பு காவலர்கள் கருத்தப்பாண்டி, முத்துகண்ணன், மகேந்திரன், அருண்குமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, தோணுகால் கிராமத்தில் உள்ள ஊருணி மற்றும் பட்டா நிலத்தில் காட்டு முயலை வேட்டையாட முயன்ற இரு இளைஞர்களை வனத்துறையினர் பிடித்தனர். விசாரணையில் அவர்கள், கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த செல்லச்சாமி மகன் அருண்(23) மற்றும் வ.உ.சி. நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கி(20) என்பதும் தெரியவந்தது..அதையடுத்து இருவரையும் கைது செய்த வனத்துறையினர் அவரிடமிருந்து தலா ரூ.5 ஆயிரம் அபராதத் தொகை வசூலித்தனர். இதுகுறித்து வனச்சரகர் சிவராம் கூறுகையில், காட்டு முயல் உள்ளிட்ட விலங்குகளை யாராவது வேட்டையாட முயல்வதைக் கண்டால் அதுகுறித்து 97891-83034, 86829-57177 என்ற எண்களில் தகவல் தெரிவித்து விலங்குகள் வேட்டையாடுவதைத் தடுக்க ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொண்டார் அவர்.