மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
✍?⚡மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கடந்த ஒன்றாம் தேதி அமல்படுத்தப்பட்ட ஆறாம்கட்ட ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
நோய்த்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, மாவட்ட அளவிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதே நேரத்தில் கிராம கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில் பரிசோதனை மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா? கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தலாமா என்பது குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளதால், அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட அளவிலான பேருந்து சேவையை மீண்டும் தொடங்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய மருத்துவ நடவடிக்கைகள் குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் நாளை முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.