இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

தமிழ்நாட்டில் முதல் முறையாக மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனை எஸ்.ஆர்.எம். மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் தொடங்கியது?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

21/07/2020-
தமிழ்நாட்டில் முதல் முறையாக மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனை எஸ்.ஆர்.எம். மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் தொடங்கியது

advertisement by google

சென்னை, காட்டாங்குளத்தூரில் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு கொரோனாவுக்கு தனியாக வார்டு அமைக்கப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இங்குள்ள ஆராய்ச்சி மையத்தில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது, மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி சோதனை மேற்கொள்ள அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, இந்தப் பணிகள் நேற்று தொடங்கி உள்ளது.

advertisement by google

இதுதொடர்பாக, எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

advertisement by google

கோவாக்சினின் மனித சோதனைகள் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தொடங்கப்பட்டுள்ளன. 20-ந்தேதி (நேற்று) இந்த சோதனைக்கு தன்னார்வலர்கள் திரையிடப்பட்டனர்.

advertisement by google

எய்ம்ஸ் பாட்னா, பி.ஜி.ஐ.எம்.எஸ். ரோஹ்தக் மற்றும் ஐதராபாத்தின் நிஜாம் இன்ஸ்டிடியூட்டில் இந்த சோதனை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. 14 நாட்கள் இடைவெளியில் அவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி வழங்கப்படும். கோவாக்சின் ஐ.சி.எம்.ஆர். மற்றும் என்.ஐ.வி. (புனே) உடன் ஒத்துழைப்புடன் வரையறுக்கப்பட்ட பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் உருவாக்கியுள்ளது.

advertisement by google

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button