இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

மாலைநேர பரபரப்பு விரிவானசெய்திகள் (16.9.2019) தமிழகம் இந்தியா உலகம்

advertisement by google

????விண்மீண்நியூஸ்?????சர்தார் சரோவர் அணை நிரம்பி வழிவதை மோடி பார்வையிடுகிறார் – நாளை குஜராத் பயணம்

advertisement by google

தனது பிறந்தநாளான நாளை, சர்தார் சரோவர் அணை முழு கொள்ளளவை எட்டுவதை பிரதமர் மோடி பார்க்கிறார்.
[9/16, 4:38 PM] விண்மீண்நியூஸ்2: ???கர்நாடக கோழை அரசுக்கு மத்திய அரசை கேள்வி கேட்க தைரியம் இல்லை- சித்தராமையா

advertisement by google

கர்நாடகத்தில் உள்ள கோழை அரசுக்கு மத்திய அரசை கேள்வி கேட்கும் தைரியம் இல்லை என்று கூறி மாநில அரசை சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.
[9/16, 4:38 PM] விண்மீண்நியூஸ்2: ???தி.மு.க.வை தடை செய்யும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது- பிரேமலதா விஜயகாந்த்

advertisement by google

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் தி.மு.க.வை தடை செய்யும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் திருப்பூரில் பேசினார்.
[9/16, 4:38 PM] விண்மீண்நியூஸ்2: ???ஆளில்லா விமான தாக்குதல் எதிரொலி – 50 சதவீத எண்ணெய் உற்பத்தியை நிறுத்தியது சவுதி அரேபியா

advertisement by google

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 50 சதவீத எண்ணெய் உற்பத்தியை சவுதி அரேபியா நிறுத்தியது.
[9/16, 4:38 PM] விண்மீண்நியூஸ்2: ???நாடு முழுவதும் இந்தி மொழியை கற்பது தவறு அல்ல: ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து

advertisement by google

இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை. நாடு முழுவதும் தொடர்பு மொழி வேண்டும் என்பதால், மத்திய அரசு இந்தியை ஊக்குவிக்கிறது என்று ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து தெரிவித்துள்ளார்.
[9/16, 4:38 PM] விண்மீண்நியூஸ்2: ???2,050 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி 21 பேரை கொன்றது – பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு

advertisement by google

பாகிஸ்தான் இந்த ஆண்டு இதுவரை 2,050 முறை சண்டை நிறுத்தத்தை மீறி நடத்தி உள்ள தாக்குதல்களில் 21 இந்தியர்கள் பலியாகி உள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டி உள்ளார்.
[9/16, 4:38 PM] விண்மீண்நியூஸ்2: ???தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன்: விஜயகாந்த் பேச்சு

advertisement by google

திருப்பூரில் நடந்த முப்பெரும் விழாவில் பங்கேற்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ஒருநாள் ஒரு பொழுதாவது எனக்காக விடியும், அப்போது தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் என்று பேசினார்.
[9/16, 4:38 PM] விண்மீண்நியூஸ்2: ???ஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது – 11 உடல்கள் மீட்பு

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 60-க்கும் அதிகமானவர்கள் சுற்றுலா சென்ற படகு ஆற்றுவெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த விபத்தில் முதல்கட்டமாக 11 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
[9/16, 4:38 PM] விண்மீண்நியூஸ்2: ???ஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஃபரா மாகாணத்தில் அரசுப் படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் தலிபான் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 35 பேர் கொல்லப்பட்டனர்.
[9/16, 4:38 PM] விண்மீண்நியூஸ்2: ???பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது- மு.க ஸ்டாலின்

பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.
[9/16, 4:38 PM] விண்மீண்நியூஸ்2: ???ஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி – 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்

துபாயில் வாழ்ந்துவந்த இந்திய தம்பதியர் மற்றும் அவர்களின் 8 மாத கைக்குழந்தை கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 3 வயது பெண் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது.
[9/16, 4:38 PM] விண்மீண்நியூஸ்2: ???அரசியல் சட்டத்தை பாதுகாக்க உறுதி ஏற்போம் – மம்தா பானர்ஜி அழைப்பு

நாட்டில் சூப்பர் அவசரநிலை நிலவுகிறது. அரசியல் சட்டத்தை பாதுகாக்க உறுதி ஏற்போம் என்று மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
[9/16, 4:38 PM] விண்மீண்நியூஸ்2: ???மெக்சிகோவில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை

மெக்சிகோவில் 44 பேரை கொலை செய்து அவர்களது உடல்பாகங்களை துண்டு துண்டாக்கி, பிளாஸ்டிக் பைகளில் அடைத்து கிணற்றுக்குள் வீசியது தெரியவந்துள்ளது.
[9/16, 4:38 PM] விண்மீண்நியூஸ்2: ???மோடிக்கு வந்த பரிசுகள் ஏலத்தில் விற்பனை

பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப்பரிசாக வழங்கப்பட்ட 2,700 நினைவுப்பரிசுகளை இ- ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
[9/16, 4:38 PM] விண்மீண்நியூஸ்2: ???வழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்… – இம்ரான் கான் மிரட்டல்

வழக்கமான போர் முறையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றுப்போக கூடும். ஆனால், அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள் என்ற முறையில் கடும் பின்விளைவுகள் ஏற்படும் என இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
[9/16, 4:38 PM] விண்மீண்நியூஸ்2: ♨சென்னையைப் போன்று தூத்துக்குடியில் பெண்ணிடம் 17 பவுன் நகையை பறித்த மர்ம நபர்கள்

?தூத்துக்குடியில் பெண்ணிடம் 17 பவுன் நகைகளை மர்ம நபர்கள் அறுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

?தூத்துக்குடி, முத்தையாபுரம் தெர்மல் நகரைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மனைவி ஜெகதீஸ்வரி (42). இவர் நேற்று மாலை அருகில் உள்ள ஓம்சக்தி நகரில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

?அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 17 பவுன் நகையை பறித்து சென்றுள்ளனர், இதன் மதிப்பு ரூ.4லட்சம் ஆகும். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


[9/16, 4:38 PM] விண்மீண்நியூஸ்2: ♨அரசியல் சட்டத்தை பாதுகாக்க உறுதி ஏற்போம் – மம்தா பானர்ஜி அழைப்பு

?ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ந் தேதி, சர்வதேச ஜனநாயக தினமாக கொண்டாடப்படுகிறது.

?இதையொட்டி, மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

?அதில் அவர் கூறியிருப்பதாவது: சர்வதேச ஜனநாயக தினத்தில், நமது நாடு எதன் அடிப்படையில், நிறுவப்பட்டதோ, அந்த ஜனநாயக கோட்பாடுகளை பாதுகாக்க நாம் மீண்டும் ஒருமுறை உறுதி ஏற்றுக்கொள்வோம்.

?நமது ஜனநாயகம், மக்களின் உரிமைகளுக்கும், சுதந்திரத்துக்கும் உத்தரவாதம் அளிக்கிறது.

?சூப்பர் அவசரநிலை நிலவும் இந்த காலத்தில், அந்த உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்.

?குடிமக்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்று எல்லா அரசுகளையும் வற்புறுத்த இந்த நாளை ஒரு வாய்ப்பாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

?ஜனநாயகம் என்பது மக்களுக்கானது, ஜனநாயகம் என்பது அனைவரையும் உள்ளடக்கியது, எல்லோருக்கும் சம அந்தஸ்து அளிக்கக்கூடியது என்று நினைவுபடுத்த இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வோம்.இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.


[9/16, 4:38 PM] விண்மீண்நியூஸ்2: ?live news ….

?திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் 33 வாக்கி டாக்கி திருட்டு: 2 பேர் கைது

?திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் 33 வாக்கி டாக்கி, 11 கையடக்க மைக் திருடியதாக துப்புரவு பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்கி டாக்கிகளை திருடிய துப்புரவு பணியாளர் சீனிவாசன், அவற்றை வாங்கி விற்ற கனகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்.
[9/16, 4:38 PM] விண்மீண்நியூஸ்2: ♨உ.பி யில் பேராசிரியருக்கு எதிராக பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர் போராட்டம்

?உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியர் எஸ்.கே.சவுபேக்கு எதிராக மாணவிகள் சிலர் கடந்த ஆண்டு பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

?இதனால் அவர் கடந்த அக்டோபர் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.பின்னர் அவர் கடந்த ஜூன் மாதம் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டாலும், வகுப்பு எடுக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

?தற்போது இந்த தடையும் நீக்கப்பட்டதால், கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் அவர் பாடம் நடத்தி வருகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் மாலையில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

?கல்லூரிக்கு வெளியே நடந்து வரும் இந்த போராட்டம் இரவு முழுவதும் தொடர்ந்ததுடன், நேற்றும் நீடித்தது. இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகள், பாலியல் புகாரில் சிக்கிய அந்த பேராசிரியரை நீக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

♦Friends Social Media
[9/16, 4:38 PM] விண்மீண்நியூஸ்2: தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே அதிகாலையில் நடந்தேறிய கொலைச் சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள மேல கூட்டுரங்காட்டை சேர்ந்த சொரிமுத்து (36) என்பவர் இன்று ( 16.9.2019) அதிகாலை 3 மணி அளவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நேற்று (15.9.2019) மாலை தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் இருவர் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு சற்றும் தனியாத நிலையில், மீண்டும் தூத்துக்குடியில் ஓர் கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பது மேலும் பரபரப்பையும், பதட்டத்தையும் உருவாக்கியிருக்கிறது.

advertisement by google

Related Articles

Back to top button