இந்தியாவில் அனைவராலும் உச்சரிக்கப்படும் கல்வான் பள்ளத்தாக்கு எங்குள்ளது?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
இந்தியாவில் அனைவராலும் உச்சரிக்கப்படும் கல்வான் பள்ளத்தாக்கு எங்குள்ளது..?
லடாக் ஒன்றியத்தின் வட மேற்கில் உள்ள அக்சாய் சின் என்ற பகுதியை, 1962 இந்திய சீனப் போரின் போது இந்தியாவிடமிருந்து சீனா கைப்பற்றியது. அக்சாய் சின்னில் இருக்கும் சர்ச்சைக்குரிய பகுதியான கால்வான் பள்ளத்தாக்கு, லடாக் மற்றும் அக்சாய் சின் இடையே இந்தோ-சீனா எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கு சீனாவின் தெற்கு ஜிஞ்ஜியாங் மற்றும் இந்தியாவின் லடாக் வரை பரவியுள்ளது. இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான இந்தப் பகுதி, பாகிஸ்தான், சீனாவின் ஜின்ஜியாங் மற்றும் லடாக்கின் எல்லைகளாக இருக்கிறது. இந்த நிலையில், கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா கட்டுமானப்பணிகளை செய்வதை சட்டவிரோதமானது என்று சீனா கூறி வருகிறது. இது தொடர்பாக பிரச்சனை எழுந்த நிலையில், அங்கு புதிதாக எதையும் உருவாக்க மாட்டோம் என்று இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் சீனா ஏற்கனவே அங்கு தேவையான ராணுவ கட்டுமானங்களை செய்துவிட்டு, தற்போது ஏற்கனவே இருக்கும் நிலைமையை பராமரிப்பது பற்றி பேசி வருகிறது. இந்த நிலையில் தனது நிலையை வலுப்படுத்த, இந்தியாவும் அங்கு கட்டுமானங்களை உருவாக்க விரும்புவதால் பிரச்சனை வலுத்து, மோதல்கள் உருவாகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.