சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றவர் தமிழ்நாடு திரும்புவதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ப.மாணிக்கம் தாகூர் எம்பி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம். முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றவர் தமிழ்நாடு திரும்புவதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ப.மாணிக்கம் தாகூர் எம்பி
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்.
விருதுநகர், ஜூன்-15
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மகாராஜபுரத்தை சேர்ந்த அசோக் கணேச பெருமாள் ,தமிழகத்தில் இருந்து சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள தடை உத்தரவால் விமானங்கள் சேவை தற்போது குறைந்த அளவே விமானங்களே இயக்கப்படுகிறது.
அசோக் கணேச பெருமாளின் வருமானத்தை நம்பியே அவரது குடும்பத்தினர் இருந்து வருகின்றனர் .
சவூதி அரேபியாவில் இருந்து திருச்சிக்கு (6E-9772) வந்தே பாரத் மிஷன் மூலம் இயக்கப்படவுள்ள விமானத்தில் ஜூன் 21, 2020 அன்று இந்தியா திரும்புவதற்குஅசோக் கணேச பெருமாள் பெயரை சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.