காசியின் போலீஸ் காவல் முடிவடைந்து கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு? மெடிக்கல் செக்கப் முடிந்து ஜெயிலில் அடைக்க முடிவு?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
காசிக்கு 6 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது……..
அதனால் காசியை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்..
முன்னதாக, காசிக்கு மெடிக்கல் செக்கப் செய்து மீண்டும் ஜெயிலில் அடைக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்!
26 வயது நாகர்கோவில் காசியின் வழக்கு திடீரென வேகம் எடுக்கிறது..
திடீரென மந்தமாகுவதாக பல்வேறு தரப்பினர் சொல்லி வருகின்றனர்.
நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்து, ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டி, பணம் பறித்து தொழிலதிபராகவே ஆகிவிட்டான் நாகர்கோவில் காசி..
யார் யார் இவனுக்கு பின்னணியில் இருக்கிறார்கள் என்று இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை.
ஏற்கனவே 3 நாள் போலீஸ் காவல் போடப்பட்டது..
திரும்பவும் 6 நாள் விசாரணை நடந்தது..
மொத்தமாக நடந்த இந்த 9 நாள் விசாரணயில் பெரிய அளவில் யார் பெயரையும் காசி சொல்லவில்லை என்றே தெரிகிறது.
தான் யாரையுமே ஏமாற்றவில்லை, அந்த பெண்களாகவே என் உடம்பை பார்த்து வலையில் விழுந்துவிட்டனர்” என்று சொன்னாரே தவிர, தன்னை இன்னமும் யோக்கியனாகவே காட்டி கொண்டு வருவது போல உள்ளது.
இதுவரைக்கும் 12 பெண்களின் பெயர், தன்னுடைய நண்பன் ஜினோவின் பெயரை தவிர வேறு யாரையுமே காசி சொல்லவில்லை..
நில ஆக்கிரமிப்பு, கந்து வட்டி புகார் பற்றியெல்லாம் விசாரணை இனிமேல் ஆரம்பமாகும் என்கிறார்கள்.
இந்த நேரத்தில் இன்னொரு தகவல் கசிந்துள்ளது..
நிர்வாண வீடியோக்கள் நிரம்பிய காசியின் லேப்டாப் வக்கீல் ஒருவரிடம் சென்றிருக்கிறது.. பிறகு அவரிடம் இருந்து அவரது பெண் தோழிகளுக்கு சென்றதாம்..
போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே காசியின் லேப்டாப் சுற்றலில் விட்டுள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது..
யார் அந்த வீடியோக்களை வெளியிட்டது, யார் அந்த காசி மிரட்டும் ஆடியோக்களை வெளியிட்டது என்பதுதான் புதிராக உள்ளது.
12 பெண்களின் லிஸ்ட்.. கக்கினான் நாகர்கோவில் காசி..
நிர்வாண வீடியோக்களை லீக்செய்தது யார்.. பரபர தகவல் காசி பயன்படுத்திய லேப்-டாப் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது… அந்த லேப்-டாப்பில் உள்ள போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ஆய்வு செய்ய கோர்ட்டில் அனுமதியும் கேட்கப்பட்டுள்ளது.
கோர்ட்டு அனுமதி அளித்தவுடன் லேப்-டாப்பை லேப்-க்கு அனுப்பி ஆய்வு நடத்தப்படும்… அதன்பிறகுதான் லேப்டாப்பை வைத்து விசாரணை தொடங்கப்படும் என்கிறார்கள்.
காசிக்கு நிறைய விஐபிக்கள் தொடர்பு உள்ளதாக ஆரம்பத்தில் சொல்லப்பட்ட நிலையில், நாளடைவில் எந்த பெயருமே வெளியே வரவில்லை.. காசியை போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர்…
எனினும் இந்த 6 நாள் விசாரணையில் போலீசாரிடம் முக்கிய தகவல்களை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அவன் கொடுத்த தகவலின் பேரில் அடுத்த கைது நடவடிக்கைகள் தொடரும், இனிமேல்தான் காசி விசாரணையில் திருப்பங்கள் காத்திருக்கிறது என்றும் போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள்.