எட்டையபுரம் அருகே அரசு பள்ளி ஆசிரியரை கார் ஏற்றி கொல்ல முயற்சி?2 பேர் கைது? முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
அரசு பள்ளி ஆசிரியரை கார் ஏற்றி கொல்ல முயற்சி – : 2 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே அரசு பள்ளி ஆசிரியரை கார் ஏற்றி கொல்ல முயற்சி செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை அருகேயுள்ள பெரிய புளியம்பட்டி பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கோவிந்தராஜ் (40) இவர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கார் வாங்குவதற்காக சோழபுரத்தினை சேர்ந்த பெரியசாமி மகன் ஆனந்தகிருஷ்ணன் என்பவரிடம் வங்கி மூலம் ரூ. 25 லட்சம் பணம் அனுப்பினாராம். ஆனால் ஆனந்தகிருஷ்ணன் கார் வாங்கி கொடுக்கவில்லை என தெரிகிறது.
இது குறித்து கேட்டதில் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆனந்தகிருஷ்ணன், கோவிந்தராஜை எட்டயபுரம் அருகேயுள்ள ஒருகம்பெனிக்கு வரும்படி கூறி தனது நண்பரான குளத்தூரை சேர்ந்த நாராயணன் மகன் சரவணகுமார் என்பவருடன் தனது காரில் ஆனந்தகிருஷ்ணன் சென்றுள்ளார். பைபாஸ் ரோட்டில் கோவிந்தராஜ் நின்று கொண்டிருந்ததை பார்த்து அவர் மீது கார் ஏற்றி காெல்ல முயற்சித்தாராம். இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் உடனே மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து புகாரின் பேரில் எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா வழக்குப்பதிந்து ஆனந்தகிருஷ்ணன், சரவணகுமார் ஆகிய 2 பேரையும் கைது அவர்கள் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.