கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க கோரி முழங்கால் இட்டு நூதன போராட்டம்?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகை வழங்க கோரி கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
2018-19ஆம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டு நிவாரணத் தொகை 60 சதவீதம் விவசாயிகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. எஞ்சிய விவசாயிகளுக்கு தற்போது வரை கிடைக்கவில்லை. இதையடுத்து, காலதாமதமின்றி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு கூட்டுப் பட்டா உள்ளிட்ட சில காரணங்களால் இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.ஆனால் வேளாண்மைத் துறை தற்போது வரை உரிய நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. எனவே, வேளாண்மைத் துறை அதிகாரிகள் இதில் தலையிட்டு உடனடியாக விடுபட்ட விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீட்டு நிவாரணத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தோப்புகரணம் போட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் கோட்டாட்சியர் விஜயாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.