கல்வி
-
*என் உயிர் தமிழினமே* *5 – 11 – 2021 வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;* *குறள் ; 759 ;* *செய்க பொருளைச் செறுநர் செறுக்கறுக்கும்* *எஃகதனின் கூரியது இல்*. *விளக்க உரை ;* பொருளை நன்கு தேடிச் சேர்க்கவேண்டும் , ஏனெனில் பகைவர்களது தருக்கை யழிக்கவல்ல கூர்மையான ஆயுதம் , அதனைப்போல வேறு யாதுமில்லை , *அதாவது செல்வங்களை* *தேடிச் சேர்க்க வேண்டும்* , *அது பகைவர் செய்யும்* *திமிரை கெடுக்கும் ஆயுதமாகும்* , *செல்வம் போல கூர்மையான* *ஆயுதம் வேறு இல்லை* . *நாம் கஷ்ட்டப்பட்டு சேர்க்கும்* *செல்வத்தால் நமக்கு* *தலைக்கனம் வரக்கூடாது* , *ஆனால் எளியவர்களின்* *வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய* *செல்வந்தர்களின் திமிரை* *அழிக்க வல்ல கூர்மையான* *ஆயுதாகமாக பயன்படுத்த வேண்டும்* . புரிந்து கொள் *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 5 – 11 – 2021 வெள்ளிக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *26 – 10 – 2021 செவ்வாய்க்கிழமை* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 45 ; பெரியாரைத் துணைக்கோடல்* *குறள் ; 442 ;* *உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்* *பெற்றியார்ப் பேணிக் கொளல்* *விளக்க உரை ;* தனக்கு வந்த துன்பங்களை நீக்கி மேல் வரக்கூடிய துன்பங்களை வராமல் முன் அறிந்து காக்கவல்ல தன்மையுடையாரைப் போற்றித் துணையாக அரசன் கொள்ளல் வேண்டும் , *அதாவது ஒருவனுக்கு* *வந்த துன்பங்களை* *நீக்கும் வழியறிந்து* *நீக்கி மேலும் அத்தகைய* *துன்பம் வராமல்* *தடுக்கும் வல்லவரைப்* *பேணித் துணையாகக்* *கொள்ள வேண்டும்* , *நீ இருக்க வேண்டிய* *இடம் பொன்* , *பொருள் நிறைந்த* *தீய இடமாக* *இருக்க கூடாது* , *உன்னை ஒரு* *உத்தமனாக* , *நாலுபேருக்கு* *உதவி செய்யும்* *வல்லவனாக்கும்* *தலைவன் யாரென்று* *கண்டு கொண்டு* *அங்கே உன்னை* *சேர்த்து விடு* . புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 26 – 10 – 2021 செவ்வாய்க்கிழமை திருக்குறள் ; அதிகாரம் ; 45 ; பெரியாரைத் துணைக்கோடல் குறள் ; 442…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *18 – 10 – 2021 திங்கள் கிழமை* *அதிகாரம்;13 ; அடக்கமுடைமை ;* *குறள் ; 123 ;* *செறிவறிந்த சீர்மை பயக்கும் அறிவறிந்து* *ஆற்றின் அடங்கிப் பெறின்* . *விளக்க உரை* ஒருவன் அறிய வேண்டுவனவற்றை அறிந்து நல்நெறியில் வழுவாது அடங்கி நடக்கப்பெற்றால் , அவனது அடக்கமானது பிறரால் மதிக்கப்பட்டு மேம்பாட்டினை அவனுக்கு கொடுக்கும் , *அதாவது ஒருவன்* *தனது வாழ்கையில்* *நல்ல நெறியில்* *இருந்து தவறாமல்* , *உலக நடப்பை* *புரிந்து கொண்டு* , *பிறர் மனம் புண்படாமல்* , *கடுமையான சொற்களை* *பயன்படுத்தாமல்* , *அவனது அடக்கமான* *அனுகுமுறை* *மற்றவர்களால்* *மதிக்கப்பட்டு வந்தால்* , *அது அவனது* *வாழ்கையில்* *மிகப்பெரிய உயர்ந்த* *நிலைக்கு வரமுடியும்* , *நாம் பிறர்க்கு* *உதவி செய்தாலும்* , *உதவி பெற்றாலும்* *அதனால் வரும்* *விவாதங்களில்* *அடங்கி பணிந்து* *போவதே* *நமக்கு சிறப்பு* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 18 – 10 – 2021 திங்கள் கிழமை அதிகாரம்;13 ; அடக்கமுடைமை ; குறள் ; 123 ;…
Read More » -
என் உயிர் தமிழினமே* *16 – 10 – 2021 சனிக்கிழமை* *திருக்குறள்* ; *அதிகாரம் ;78 ; படைச் செருக்கு* *குறள் ;773* பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு *விளக்க உரை* உறுதியாய்ப் போர்புரிதலைப் பெரிய வீரம் என்று அறிஞர் சொல்லுவர் , பகைவர்க்கு ஒரு தாழ்வு வந்தாயின் அதனைத் தீர்த்தற்கு உதவுந் தன்மை அவ் வீரத்தின் கூர்மையாகும் , *அதாவது பகைவரை* *வீழ்த்துவதற்காக* *உறுதியாக இருந்து* *வெற்றி பெறுவது* *பெரிய ஆண்மை ஆகும்* , *அதேசமயம் பகைவர்க்கு* *ஆபத்தான நேரத்தில்* *உதவி செய்வதான்* *வீரத்தின் கூர்மையாகும்* , *நினைத்த நேரத்தில்* *எளியவர்களுக்கு* *வரும் எந்தவிதமான* *ஆபத்திலிருந்து* *காப்பாற்றுவதே* *பேராண்மையின்* *கூர்மையாகும்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 16 – 10 – 2021 சனிக்கிழமை திருக்குறள் ; அதிகாரம் ;78 ; படைச் செருக்கு குறள் ;773 பேராண்மை என்ப…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *17 – 10 – 2021 ; ஞாயிற்றுக்கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ;33 ; கொல்லாமை* ; *குறள் ;321* ; *அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்* *பிறவினை எல்லாம் தரும்* . *விளக்க உரை* ; அறச்செய்கை யாதெனில் , ஓருயிரையுங் கொல்லாமையே , கொல்லுதல் பிற பாவச் செய்கைகள் எல்லாவற்றிற்கும் மேல் இடமாகும் , *அதாவது பாவங்களில்* *பெரிய பாவம் கொலை* *செய்வது தான்* , *இறைவன் படைத்த* *உயிரை கொல்ல* *யாருக்கும் அதிகாரம்* *இல்லை* , *கொலை செய்வதன் மூலம்* *இன்னும் பெரிய* *பாவங்களை செய்ய* *வழிவகுக்கும்* , *ஒருவன்* *கொலை செய்த அந்த* *நிமிடத்தில் இருந்து* *வாழ்நாள் முழுவதும்* *அனுதினமும் செத்து* , *செத்துப் பிழைப்பான்* , *ஆகவே தவறு செய்வது* *மட்டும் குற்றம் அல்ல* , *தவறு செய்ய மனதால்* *நினைத்தாலே* *மிகப்பெரிய குற்றமாகும்*. புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 17 – 10 – 2021 ; ஞாயிற்றுக்கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ;33 ; கொல்லாமை ; குறள் ;321…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *15 – 10 – 2021 வெள்ளிக்கிழமை* *திருக்குறள்* ; *அதிகாரம் ;63 ; இடுக்கண் அழியாமை* *குறள் ;627* *இலக்கம் உடும்பிடும்பைக்கு என்று கலக்கத்தைக்* *கையாறாக் கொள்ளதாம் மேல்*. *விளக்க உரை ;* மேலோர் உடம்பானது துன்பத்திற்கு ஏற்பட்ட இடமாகும் என்னும் உண்மையை அறிந்து , துன்பத்தைத் துன்பமாகக் கொள்ள மாட்டார் , *அதாவது அறிவுடையோர்* *தமது உடம்பு துன்பம்* *என்னும் வாளுக்கு* *இறையாகும் என்று* *அறிந்தவர்* , *எப்போதும்* *எளியவர்களுக்காக* *போராடும் போது* , *துன்பங்களை எதிர்* *கொள்ள வேண்டும்* *என்று தெரிந்து* , *துன்பத்தை துன்பமாக* *மனதளவில் நினைத்து* *வருந்த மாட்டார்* , *துன்பங்களும்* , *அவமானங்களும்* *தான் ஒரு மனிதனை* *பட்டைதீட்டி* , *சாதனை மனிதனாக* *உருவாக்கும் சக்தி* . புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 15 – 10 – 2021 வெள்ளிக்கிழமை திருக்குறள் ; அதிகாரம் ;63 ; இடுக்கண் அழியாமை குறள் ;627 இலக்கம் உடும்பிடும்பைக்கு…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *14 -10- 2021* *வியாழக்கிழமை* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 4 ; அவா வலியுறுத்தல்* *குறள் ;40 ;* *செயற்பாலது ஓரும் அறனே , ஒருவற்கு* *உயற்பாலது ஓரும் பழி* *விளக்க உரை ;* ஒருவன் தன்பொருட்டுச் செய்யற் பாலது நற்செய்கையே தவிர்தற்குரியது பழிச்செய்கையே , *அதாவது ஒருவன்* *செய்ய வேண்டியது* *இல்லாதவர்களுக்கு* *நல்லது செய்ய* *வேண்டியது மட்டுமே* , *அவன் செய்யாமல்* *இருப்பது மற்றவர்களுக்கு* *தீமை செய்யாமல்* *இருப்பது மட்டுமே* , *நன்மைக்கும்* *நன்மை செய்* *தீமைக்கும்* *நன்மையே செய்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 14 -10- 2021 வியாழக்கிழமை திருக்குறள் ; அதிகாரம் ; 4 ; அவா வலியுறுத்தல் குறள் ;40 ; செயற்பாலது ஓரும்…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *10 – 10 – 2021 ; ஞாயிற்றுக்கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 44 ; குற்றங்கடிதல் ;* *குறள் ; 434 ;* *குற்றமே காக்க பொருளாக் குற்றமே* *அற்றம் தரூஉம் பகை* *விளக்க உரை ;* தனக்கு அழிவைத் தரும் பகை குற்றமேயாகும் , ஆகையால் தன்னிடத்தில் அக்குற்றம் வராமல் கருத்தில் கொண்டு காக்க வேண்டும் , *அதாவது மற்றவர்களுக்கு* *தன்னை உதாரணமாக* *கொண்டு வாழவேண்டும்* , *என்று நினைப்பவன்* *தன் மீது யாரும் குற்றம்* *சொல்லாதவாறு நடக்கவேண்டும்* , *எப்படியாவது குற்றம்* *சாட்ட நினைப்பவர்கள்* *எண்ணங்களை வெல்லும்* *வல்லவனாக வாழ வேண்டும்* . *இன்று சதிகார்கள் உன்னை* *நிராகரிக்கலாம்* , *கலங்காதே இறைவன்* *பார்த்துக் கொண்டே இருப்பான்* , *நாளை அசைக்க முடியாத* *சக்தியாக உன்னை* *அவர்கள் முன் நிறுத்துவான்* , *எல்லாம் இறைவன் செயல்* . புரிந்து கொள் *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 10 – 10 – 2021 ; ஞாயிற்றுக்கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 44 ; குற்றங்கடிதல் ; குறள்…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *5 – 10 – 2021 செவ்வாய்கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 67 :வினைத்திட்பம் ;* *குறள் ; 668 ;* *கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது* *தூக்கம் கடிந்து செயல்* *விளக்க உரை ;* மனக்கலக்கம் இல்லாமல் தெளிவாக நல்லதென்று அறிந்த முயற்சியைச் செய்யுங்கால் சஞ்சலமில்லாமல் , காலநீட்டித்தலை யொழித்து அதனை விரைந்து செய்க , *அதாவது மனம்* *கலங்காமல் செய்வதாகத்* *துணிந்து விட்ட* *செயலை தளர்ச்சி* *இல்லாமல் காலம்* *தாழ்த்தாமல் செய்ய* *வேண்டும்* , *சூழ்நிலையை* *மேற்கொண்டவன்* *தான் மனிதன்*, *சூழ்நிலையை* *காரணம் காட்டி* *எந்த ஒரு நல்ல* *செயலையும்* *செயல்படுத்தாமல்* *கலங்கி நிற்காதே* , *சோம்பலை ஒழித்து* *துணிந்து நில்* *நீ எதிர்பார்க்காத* *வெற்றிக் கனி* *உன் உள்ளங்கையில்* . புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 5 – 10 – 2021 செவ்வாய்கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 67 :வினைத்திட்பம் ; குறள் ; 668…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *3 – 10 – 2021 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 74 ; நாடு ;* *குறள் ; 739 ;* *நாடென்ப நாடா வளத்தன , நாடல்ல* *நாட வளந்தரும் நாடு* *விளக்க உரை ;* தேடி வருந்தாமல் தானே உண்டாகுஞ் செல்வத்தையுடைய நாடுகளே சிறந்த நாடுகள் என்று நூலோர் சொல்லுவர் , வருந்தி முயன்றே பொருள் உண்டாக்கக் கூடிய நாடுகள் சிறந்த நாடாகாது , *அதாவது பிற நாடுகளை* *சார்ந்து இல்லாத* *செல்வத்தையுடைய* *நாடே சிறந்த நாடு* , *அயல்நாட்டு உதவியை* *எதிர்பார்க்கும் நாடு* *சிறந்த நாடாகாது* , *நாளைக்கு நமக்கு* *என்ன தேவை* *என்பதை உணர்ந்து* *இன்றே நமது* *முயற்சியுடன் உழைப்பு* *இருந்தால்* , *யாரிடமும் நாம்* *கையேந்த வேண்டியது* *இல்லை* , *அதுபோல நமது நாடும்* *சிறந்து விளங்க முடியும்* . புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 3 – 10 – 2021 ; ஞாயிற்றுக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 74 ; நாடு ;…
Read More » - advertisement by google