தத்துவ வரிகள்..!
பல துன்பங்களையும் சின்னச் சின்ன அவமானங்களையும் சந்தித்தால் தான் வாழ்க்கையில் உயர முடியும்…
சாதிக்க நினைப்பவன் மட்டுமே அதிகமாக சோதிக்கப்படுகிறான். பிறரை அதிகமாக நேசிப்பவன் மட்டுமே அதிகமாகக் காயப்படுகிறான்.
இது என்னுடையது என்று நினைக்கும் வரை எதையும் விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை. எதுவும் என்னுடையது அல்ல என்கிற பக்குவம் வரும் போது விட்டுக் கொடுக்க நம்மிடம் ஏதும் இருப்பதில்லை.
உதிர்ந்த பூக்களுக்காக கண்ணீர் விடாதே. மலர்கின்ற பூக்களுக்கு தண்ணீர் விடு…
துன்பம் வரும் போதும் இன்பம் வரும் போதும் கூடவே இருக்கும் ஒரே நண்பன் நமது உழைப்பு மட்டும் தான்.
உன் மீது பிரியம் உள்ளவர்களிடம் நீ பொய்யைச் சொன்னாலும் நம்பி விடுவார்கள்.
உன் மீது பிரியம் இல்லாதவர்களிடம் நீ உண்மையைச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்..
குறைகளை தன்னிடம் தேடுபவன் தெளிவடைகின்றான். குறைகளைப் பிறரிடம் தேடுபவன் களங்கப்படுகிறான்…..