இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

காலைநேர விரிவானசெய்திகள் தமிழ்நாடு இந்தியா உலகம்

advertisement by google

???விண்மீண்நியூஸ்????

advertisement by google

?ஊடகங்கள் சிலரை மட்டுமே மிகைப்படுத்துகின்றன..

advertisement by google

?ஊடகங்கள் சில வீரர்களை மட்டுமே மிகைப்படுத்தி காட்டுகின்றன என தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரபாடா தெரிவித்துள்ளார்.
[9/10, 8:12 AM] விண்மீண்நியூஸ்2: புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், ஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு ரூபாய் 86,500 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை, இதுவே நாட்டில் செலுத்தப்பட்டுள்ள அதிகபட்ச அபராத தொகை ஆகும்
[9/10, 8:12 AM] விண்மீண்நியூஸ்2: ®®சென்னை திருவல்லிக்கேணியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இந்து முன்னணியினர் முற்றுகை

advertisement by google

®®அனுமதி மறுக்கப்பட்ட பாதையில் விநாயகர் சிலையை கொண்டு செல்ல முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர்

advertisement by google

®®ஊடகதளம்
[9/10, 8:12 AM] விண்மீண்நியூஸ்2: புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்க நான் தடையாக இல்லை:

advertisement by google

மக்கள் தரமான அரிசியை வாங்கிக் கொள்ள இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்கக் கூறினேன்.

advertisement by google

இலவச அரிசி வழங்க நான் தடையாக இருக்கிறேன் என்ற பரப்புரை தவறானது.

advertisement by google

– புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி.
[9/10, 8:12 AM] விண்மீண்நியூஸ்2: ட்விட்டரில் அதிகாரப்பூர்வமான கணக்கு எனக்கு இல்லை; எனது பெயரில் உலா வரும் கணக்குகள் போலியானவை.

– இஸ்ரோ தலைவர் சிவன்
[9/10, 8:12 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை என்பது சாதாரணமான ஒன்றாக வாடிக்கையாகிட்டது. அவ்வாறு இயற்கை வளமான மண் வளத்தை சுரண்டி பணம் பார்க்கும் கும்பல் கோவை மாவட்டத்தையும் விட்டு வைக்காமல் மணல் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

குறிப்பாக, தடாகம் பகுதிகளில் இரவு, பகல் பாராமல் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. மணல் கொள்ளையைத் தடுக்க சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கொள்ளை நின்றபாடில்லை.

இந்நிலையில், தடாகத்தைச் சேர்ந்த எஸ்.கணேஷ் என்பவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது ஐந்து வயது மகனை சிகிச்சைக்காக கோவையில் உள்ள மாசோனிக் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, மகனைப் பரிசோதித்த மருத்துவரின் வார்த்தைகள் அவருக்கு பெரிய அதிர்ச்சியளித்தது. “நீங்கள் உங்கள் மகனுக்கு ஆரோக்கியமான சூழலை வழங்கவில்லை, அவரது வயது இவ்வளவு மாசுபாட்டைத் தாங்கும் வாய்ப்பில்லை” என்று மருத்துவர் கூறியபோது அதிர்ச்சியடைந்த கணேஷ், சிறுவனின் நாசியிலிருந்து தூசு எடுக்கப்பட்டபோது மனம் உடைந்ததாக கூறினார்.

ஒரு காலத்தில் மஞ்சள் சோளத்திற்கு புகழ் பெற்ற இடமாக விளங்கிய அப்பகுதி, தற்போது பலரின் உயிருக்கு எமனாக மாறியுள்ளது. நஞ்சுண்டாபுரம் (22), சின்னதடாகம் (23), வீரபாண்டி(24), சோமயம்பாளையம் மற்றும் பன்னிமடை ஆகிய ஐந்து பஞ்சாயத்துகளில், மரணம் வெகுவாக அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியில் வசிப்பவர் ஒருவர் கூறும்போது, “நான் இளமையாக இருந்தபோது, 90 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாழ்வதை நான் கண்டிருக்கிறேன். வயதானவர்கள் கூட வலுவாகவும், குழந்தைகளைப் போலவும் சுற்றி வருவதை நாங்கள் கண்டோம். ஆனால் இன்று இது அப்படி இல்லை, ஆயுட்காலம் பெரிதும் குறைந்துவிட்டது, என்று கூறினார்.
சுரங்க மற்றும் செங்கல் சூளை அறைகளால் ஏற்படும் மாசுபாட்டை எதிர்த்து, ஐந்து பஞ்சாயத்துகளின் மக்கள் கடுமையாக போராடி வரும் நிலையில், கணேஷ் தாக்கல் செய்த ஒரு தகவல் அறியும் உரிமை சட்டத்தில்(RTI) கிடைத்த பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, ஏனெனில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அனுமதியின்றி கடந்த 20 ஆண்டுகளாக செங்கல் சூளைகள் மற்றும் பள்ளத்தாக்கில் முழு வீச்சில் வேலை நடைபெற்று வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் மிகப்பெரிய சேமிப்புக் கொட்டகைகளைக் கட்டியதற்கும் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தில் (HACA) முறையான அனுமதி பெறவில்லை எனவும் இதுகுறித்து தெரிந்தும் அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக கூறுகின்றனர்.
சின்னதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டபுரம் மற்றும் பன்னிமடை ஆகிய பஞ்சாயத்துகளில் 58 மின்மாற்றிகள் மூலம் 61 அறைகளுக்கு மட்டுமே தமிழக தலைமுறை மற்றும் விநியோகக் கழகம் (TANGEDCO) முறையான மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தில் தெரியவந்துள்ள நிலையில், இந்த சட்டவிரோத செயல்களை எந்த அரசாங்கத் துறையும் ஆதரிக்கவில்லை என்றால், உண்மையில் யார் ஆதரிக்கிறார்கள், யார் பயனடைகிறார்கள்? என்று மக்கள் இயக்கத்தின் ஒரு உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
தடாகம் பள்ளத்தாக்கைச் சேர்ந்த இரண்டு காட்டு யானைகளான சின்னதம்பி மற்றும் வினாயகன் ஆகியவற்றைப் பிடித்ததால் ஏற்பட்ட கொந்தளிப்புக்குப் பின்னர், இந்த ஆண்டு இரண்டு முறை கோவை வனத்துறையினர், மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர். இப்பகுதியைப் பற்றி ஆய்வு செய்த ஆசிய யானை சிறப்புக் குழுவின் உறுப்பினரும், இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் (WWF) ஆலோசகருமான அஜய் தேசாய், சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையை எழுதியிருந்தார். அதில், மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான எதிர்மறையான தொடர்புகளுக்கு மணல் சுரங்கமே ஒரு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்,
அஜய் தேசாய் அறிக்கையைப் பயன்படுத்தி, மாவட்ட வன அலுவலர் டி.வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தில், சுரங்கத்தால் எஞ்சியிருக்கும் ஆழமான பள்ளங்கள் யானைகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன என்றும் பல அறைகள் முறையான அனுமதி பெறாமல் இயங்குவதாக கூறினார்.
தடாகம் சட்டவிரோத செங்கல் சூளைகள் மற்றும் மணல் சுரங்கத்தால் ஏற்பட்ட பெரும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து தொடர்ந்து பல புகார்கள் வந்தாலும், அந்த புகார்கள் குறித்து ஆராயப்பட்டு சட்டவிரோத மணல் சுரங்கத் தொழிலாளர்களின் செயல்பாட்டை சரிபார்க்க சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உறுதியளித்துள்ளார்.
பேரழிவின் விளிம்பில் இருக்கும் தடாகம் பகுதி சுற்றுச்சூழலை மீட்டெடுக்க, சட்டவிரோத சுரங்கம் மற்றும் செங்கல் சூளைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என்பதே தடாகம் பகுதி விவசாயிகள் மற்றும் குடியிருப்பு வாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
[9/10, 8:12 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅திருப்பூரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 67,800 ரூபாய் பணத்தையும் 7 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் பெருமாநல்லூர் சாலை சாந்தி திரையரங்கம் பின்புறம் நேற்று இரவு திருப்பூர் வடக்கு காவல்துறையினர் ரோந்து பணிக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்குள்ள தனியார் கட்டடத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது, குடிபோதையில் இருந்த நபர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்க முயன்றுள்ளனர்.

இதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரக்குமார், சிவக்குமார் உட்பட 17 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 67,800 ரூபாய் பணம் மற்றும் 7 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
[9/10, 8:12 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பின்னலாடை நிறுவனத்தை சூறையாடி ஊழியர்களை தாக்கிய வழக்கில் இந்து முன்னணியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவின்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு திருவிழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கடந்த 5ஆம் திருப்பூர் மாநகர பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டன.
அப்போது, அங்கேரிபாளையம் சாலையில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான தனியார் பின்னலாடை நிறுவனத்தில் அத்துமீறி விநாயகர் சிலையுடன் புகுந்த இந்து முன்னணியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் விநாயகர் சதுர்த்தியின் போது நன்கொடை தரமறுத்ததாக தெரிவித்து கற்களைக் கொண்டும் இரும்பு கம்பிகளை கொண்டும் தாக்கினர் இதில் பின்னலாடை நிறுவனத்தின் ஜன்னல் கண்ணாடிகள் பூந்தொட்டிகள் சேதமடைந்தன மேலும் அங்கு பணிபுரிந்த ஊழியர்களையும் தாக்கினர் இதில் 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்து முன்னணியை சேர்ந்த இருபது பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இதனடிப்படையில் திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீசார் கார்த்திக் , ராதா கிருஷ்ணன் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து முன்னணியின் இத்தகைய செயல்பாட்டை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வருகின்ற 9ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டமும் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
[9/10, 8:12 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅நீலகிரி : கோத்தகிரியில் இருந்து உதகை செல்லும் சாலை பகுதியில் மேட்டுப்பாளையத்திலிருந்து வந்து கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று, பேரார் பகுதியில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும் பாேது சாலையின் ஓரத்தில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் 200 அடி பள்ளத்தில் விழுந்திருக்க வேண்டிய சூழலில், மரத்தில் மாேதி நின்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து உதகை செல்லும் சாலையில் பல இடங்களில் தடுப்பு சுவர் இல்லாததால் மண் அரிப்பு ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்கள் நேரிடுவதால் நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

கோத்தகிரியில் இருந்து உதகை செல்லும் சாலை பகுதியில் மேட்டுப்பாளையத்திலிருந்து வந்து கொண்டிருந்த சொகுசு வாகனம் பேரார் பகுதியில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும் பாேது சாலையின் ஓரத்தில் நிலைதடுமாறி விபத்திற்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்த நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

விபத்துக்குள்ளான வாகனம் 200 அடி பள்ளத்தில் விழுந்திருக்க வேண்டிய சூழலில் மரத்தில் மாேதி நின்றது. இதன் காரணமாக மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நேரிடுவதால் உதகை முதல் கோத்தகிரி வரையிலான சாலையில் எங்கெங்கு தடுப்பு சுவர்கள் தேவைப்படுகிறதோ அப்பகுதிகளில் தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
[9/10, 8:12 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : சர்வதேச முதியோர்‌ தினவிழாவை முன்னிட்டு, முதியோர்‌ நலனில்‌ சிறப்பாக செயலாற்றிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துக்கள்‌ மற்றும்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும்‌ அக்டோபர்‌ முதல்‌ நாளன்று சர்வதேச முதியோர்‌ தினவிழா மாநில அளவில்‌ கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே 2019ம்‌ ஆண்டில்‌ முதியோர்‌ நலனில்‌ அக்கறை கொண்டும்‌, ஆதரவு அளித்தும்‌ சிறப்பாக செயல்படும்‌ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்‌ மற்றும்‌ தனிநபர்களை தேர்வு செய்து பாராட்டு சான்றிதழ்‌ வழங்கும்பொருட்டு முதியோர்‌ நலனில்‌ சிறப்பாக செயலாற்றிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துக்கள்‌ மற்றும்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.

மேற்படி, விண்ணப்பங்கள்‌ மற்றும்‌ கருத்துக்கள்‌ 15.09.2019 மாலை 5 மணிக்குள்‌ மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்‌ செயல்படும்‌ மாவட்ட சமூகநல அலுவலகத்தில்‌ சமாப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.
[9/10, 8:12 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅நீலகிரி : தமிழக அரசு சார்பில் 5 கோடி நிதி பெற்று குன்னுார் ஆற்று நீர் பயன்பாட்டிற்கு உகந்ததாக சுத்திகரிக்கப்படும் என குன்னூரில் நடைபெற்ற கிளீன் குன்னூர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரப் பகுதியில் ஓடும் ஆற்றில் கடந்த பல ஆண்டுகளாக இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு மிகப்பெரிய அளவிலான சுகாதார சீர்கேடு ஏற்றிருந்தது. இதனை கிளீன் குன்னூர் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் தூய்மைப் படுத்தப்பட்டது. இந்த நீர் பவானி ஆற்றில் சென்று கலப்பதால் இதனை குடிநீராகவும் மற்ற பயன்பாட்டிற்காகவும் சமவெளி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனைக் கருத்தில் காெண்டு ஆற்றினை சுற்றிலும் ‘கீளீன் குன்னூர்’ அமைப்பு சார்பில் ஆற்றைத் தூய்மைப்படுத்தி, கழிவுகள் மற்றும் வண்டல் மண் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.
மேலும், ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, மவுண்ட்ரோடு முதல் வி.பி.தெரு வரை 398 மீட்டர் நீளத்திற்கு 7 முதல் 9 அடி உயரம் வரையிலான செயின்லிங்க், வேலி அமைக்கும் பணி மும்பையை சேர்ந்த ‘இஸ்ப்ராவா ஹோம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் 7 லட்சம் மதிப்பிலான செயின்லீக் வேலி அமைக்கப்பட்டது. அதன் நிறைவு விழா குன்னுார் நகராட்சி வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கீளீன் குன்னூர்’ மற்றும் மும்பையை சேர்ந்த இஸ்ப்ராவா ஹோம்ஸ் நிறுவனத்தின் தலைவர் தர்சன்ஷா, கோத்ரெஜ் மேலாண்மை இயக்குநர் நாதிர் கோத்ரெஜ் குன்னுார் சட்ட மன்ற உறுப்பினர் சாந்தி ராமு, சுற்றுச்சுழல் ஆர்வலர்கள்’ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
[9/10, 8:12 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅மேட்டுப்பாளையம் அருகே உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா தளம் பில்லூர் அணை நிரம்பியதையடுத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

கோவை காரமடை அருகே உள்ள பரளிக்காடு என்ற பகுதியில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா தளம் அமைக்கப்பட்டுள்ளது. இது சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழல் சுற்றுலா தளத்தை வனத்துறையினருடன் இணைந்து மலைவாழ் மக்களும் செயல்பட்டு வருகின்றனர். இங்கு வர முன்பதிவு செய்வது அவசியம்.
இப்படி வனத்தின் நடுவே அணையின் நீர் தேக்கபகுதியில் பரிசல் பயணம் செய்து இயற்கை அழகினை கண்டு ரசிப்பதுடன் வனத்துறை பாதுகாப்புடன் டிரக்கிங்,மலைவாழ் மக்களின் உணவு, மூலிகை குளியல் என பல சிறப்பம்சங்கள் இந்த பரளிக்காடு பகுதியில் உள்ளது.
ஆகவே இந்த சுற்றுலா பகுதிக்கு தமிழகம் கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
ஆனால் பருவமழை காலங்களில் அணை நிரம்பும் பொழுது இந்த சுற்றுலா தளத்தை பயன்படுத்துவது ஆபத்தானது.
இது போன்ற பருவ மழை பெய்து அணை நிரம்பும் நேரங்களில் வனத்துறையினர் இந்த சுற்றுலா பயணத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது வழக்கம்.
இப்படியிருக்க நேற்று மூன்றாவது முறையாக பில்லூர் அணை நிரம்பியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர் தேக்க பகுதியில் நீரோட்டம் அதிகமான காரணத்தால் பரிசல் இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதுகாப்பு கருதி நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த சூழல் சுற்றுலா ரத்து செய்யபட்டுள்ளது என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
பில்லூர் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து இருந்ததால் கடந்த ஒரு மாதகாலமாக இந்த சூழல் சுற்றுலா நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் இந்த வாரம் மீண்டும் சூழல் சுற்றுலா நடைபெற இருந்ததையடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் முன்பதிவை தொடங்கினர்.
ஆனால் மீண்டும் பில்லூர் அணை நிரம்பியதால் தற்போது மீண்டும் சூழல் சுற்றுலா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரத்து தொடர்பான தகவல் சுற்றுலா பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
[9/10, 8:12 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவையில் நடைபெறும் செம்மண் கொள்ளையை தடுத்து நிறுத்தாவிட்டால் அரசு அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் என பாமக இளைஞரணி துணைச் செயலாளர் அசோக் ஸ்ரீநிதி கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

கோவை தடாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பல வருடங்களாகவே சட்டவிரோதமாக செம்மண் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. இந்த செம்மண் கொள்ளை சம்பவம் கடந்த சில வருடங்களாக நவீன இயந்திரங்கள் மூலம் 50 அடி 60 அடி என ஆழத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், வனவிலங்குகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
இதற்கு காரணமான 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளை மூட வேண்டுமெனவும் சட்டவிரோத செம்மண் கொள்ளையை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பாமக இளைஞரணி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல செம்மன் கொள்ளையை கண்டும் காணாமல் இருக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரின் படி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்கள் மீது நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தொடுப்போம் எனவும் பாமகவின் இளைஞரணி துணைச் செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது; தடாகம் பகுதியில் நடைபெறும் செம்மண் கொள்ளை தொடர்பாக நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகைப்பட ஆதாரங்களுடன் புகாரையும் தகவலையும் கொடுத்துள்ளோம்.
அதேபோல தடாகம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், வீரபாண்டிபுதூர், சோமையம்பாளையம் ஆகிய ஐந்து கிராம பஞ்சாயத்தில் 200க்கும் மேற்பட்ட செங்கற்சூளைகள் அரசு அனுமதியை தாண்டி அதிகமாக மண் எடுப்பில் ஈடுபடுவதையும் புகாராக கொடுத்துள்ளோம்.
அதேபோல அதிகப்படியான மண்ணை எடுப்பதால் அங்குள்ள வன விலங்குகளின் வாழ்வாதாரம் அழிந்து போகிறது.இரு மாதங்களில் நான்கு யானைகள் இறந்துள்ளது.எனவே அரசு உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கவில்லை என்றால் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு பதிவும் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
[9/10, 8:12 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ராணுவ பகுதிகளில் பிளாக் பிரிட்ஜ், பேரக்ஸ், வெலிங்டன் சின்ன வண்டி சோலை, உள்ளிட்ட பகுதிகளில் காட்டெருமைகள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் இவற்றை அடர்ந்த வனப்பகுதிகளில் விரட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில், சிறுத்தை, கரடி, காட்டெருமை, உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் இன்று ராணுவ பகுதிக்கு செல்லும் மயான பூமியில் 30க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் வந்து சென்றன. இவை பிளாக் பிரிட்ஜ் பகுதியில் சாலைகளை கடக்கும் போது விபத்துக்கள் நேரிடும் சூழல் இருக்கிறது.

மேலும், இப்பகுதி ராணுவ பகுதி என்பதால் அடிக்கடி முக்கிய பிரமுகர்கள் வந்து செல்வதால் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவிதம் நடக்கும் முன் இந்த காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதியில் துரத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
[9/10, 8:12 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : ஜெருசலேம்‌ புனித பயணம்‌ மேற்கொள்வதற்காகத் தமிழ அரசால்‌ நபர்‌ ஒருவருக்கு ரூ. 20,000 நிதி உதவி வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ் பயன்பெற விரும்பும்‌ கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன

இத்திட்டத்தின்‌ கீழ்‌ அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்துவர்கள் குழுவில், 50 கன்னியாஸ்திரிகள்‌ அருட்சகோதரிகள்‌ புனித பயணம் மேற்கொள்‌ள அனுமதித்தும்‌ அரசால்‌ ஆணையிடப்பட்டுள்ளது. இப்புனித பயணம்‌ இஸ்ரேல்‌, எகிப்து மற்றும்‌ ஜோர்டான்‌ ஆகிய நாடுகளில்‌ உள்ள பெத்லஹேம்‌, ஜெருசலேம்‌ நாசரேத்‌, ஜோர்டான்‌ நதி, கலிலேயாசமுத்திரம்‌ மற்றும்‌ கிறிஸ்துவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனித பயணம்‌ அக்டோபர்‌ முதல்‌ 2020-ம் ஆண்டு மார்ச்‌ வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம்‌ 10 நாட்கள்‌ வரை இருக்கும்‌.

இதற்கான விண்ணப்பப்படிவம்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகங்களில்‌ இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம்‌. தவிர www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில்‌ விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம்‌ செய்தும்‌ பயன்படுத்தலாம்‌. இத்திட்டத்திற்கான நிபந்தனைகள்‌ இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்‌ அனைத்தும்‌ உரிய இணைப்புகளுடன்‌ அஞ்சல்‌ உறையில்‌ “கிறிஸ்துவர்களின்‌ ஜெருசலேம்‌ புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும்‌ விண்ணப்பம்‌ 2019-2020 என்று குறிப்பிட்டு, ஆணையர்‌, சிறுபான்மையினர்‌ நலத்துறை, கலசமஹால்‌ பாரம்பரிய கட்டடம்‌, முதல்தளம், சேப்பாக்கம்‌, சென்னை-600 005 என்ற முகவரிக்கு வரும் 30-ம் தேதிக்குள் கிடைக்கும்‌ வகையில்‌ அனுப்புதல்‌ வேண்டும்‌. (நேரில் வர வேண்டியதில்லை).

மேலும்‌ விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ (ம) சிறுபான்மையினர்‌ நல அலுவலர்‌, கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌ / சிறுபான்மையினர்‌ நல இயக்குநரகம்‌, தொலைபேசி எண்‌.044-2852033-த்திலும்‌ தொடர்புகொள்ளலாம்‌.
[9/10, 8:12 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : சிறுவாணி அணையில் முழுமையாக தண்ணீரை தேக்காமல் வீணாக தண்ணீரை திறந்து விடும் கேரள அரசை கண்டித்து, வரும் 10 ம் தேதி கோவைக்கு வரும் கேரள பேருந்துகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் என தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் அறிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் முழு கொள்ளளவான 50 அடிக்கு தண்ணீரை கேரள அரசு தேக்கவிடுவதில்லை என்று குற்றம்சாட்டினார்.
மேலும், கேரள அரசு சிறுவாணி அணையில் 42 அடி உயரத்திற்கு வந்ததும் தண்ணீரை வீணாக திறந்து விடுவதாகவும், அணையில் தண்ணீரை முழு கொள்ளவை எட்ட விடாமல், தண்ணீரை கேரள அரசு வீணாக்குவதால் கோவையில் கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் எனவும், தமிழக மக்களை கேரள அரசு வஞ்சிக்கிறது எனவும் அவர் கூறினார்.
அதேபோல, கடந்தாண்டு 3 முறை சிறுவாணி அணை நிரப்பிய போதும், கேரளாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், சிறுவாணி அணை பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்த அவர், கேரள அரசை கண்டித்து பல்வேறு கட்சிகள் சார்பில் வருகின்ற 10ம் தேதி கோவைக்கு வரும் கேரள பேருந்துகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
[9/10, 8:12 AM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று 100 நாள்கள் ஆகியுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த 100 நாளில் எந்த வளர்ச்சியும் நாட்டில் ஏற்படவில்லை என குற்றம்சாட்டி உள்ளார்

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று 100 நாள்கள் ஆகியுள்ளது. இதையொட்டி பாஜகவினர் நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த 100 நாளில் நிறைவேற்றிய சட்டங்கள், மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் பாஜகவினர் இறங்கி உள்ளனர்.இதேநேரம் காங்கிரஸ் கட்சி பாஜக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை என கடுமையாக விமர்சித்துள்ளது. மோடி அரசின் 100 நாள் ஆட்சி.. மூன்று வார்த்தைகளுடன்.. வீடியோ வெளியிட்டு கலாய்க்கும் காங்கிரஸ்இதனிடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் ஆகிவிட்டது. ஆனால் நாட்டில் எந்த வளர்ச்சியும் இல்லை. ஜனநாயகம் தொடர்நது வீழ்த்தப்பட்டது , விமர்சனங்களை தவிர்க்க ஊடகங்கள் மீது கடுமையான அடக்குமுறை நடைபெறுகிறது. பொருளாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது. இதை சீரமைக்க சரியான திட்டமிடலும், பயணமும் தேவைப்படும் நிலையில் அது இல்லாத தலைமையே இப்போது உள்ளது” என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.-காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கபில் சிபல் இன்று மோடி அரசின் 100 நாள் ஆட்சி குறித்து கூறுகையில், ‘சாதாரண மனிதனுக்கும் நல்லது செய்ய வேண்டும் என நினைத்து தான் லோக்சபா தேர்தலில் மக்கள் பாஜகவை வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக சாதாரண மக்களுக்கு பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது. இணைய ஊடகங்கள் ஒருதலைபட்சமாகி வருகிறது பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்து வருகிறது.கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த அரசிடம் எந்த செயல்திட்டமும் இல்லை, ஆனால் அரசியல் எதிரிகளுக்கு எதிராக வேதாந்த அரசியல் நடக்கிறது. அமலாக்க துறையால் எந்த ஆதாரமும் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது, வருமான வரித் துறை மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) ஆகியவை தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. சிறிய வணிகர்கள் பெரும் துன்பத்தில் இருக்கிறார்கள் ” என கூறியுள்ளார்.
[9/10, 8:12 AM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்திகள்

?எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல், ஒரு லிட்டர் ரூ.74.51 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டர் ரூ.68.79 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button